இந்தியாவுக்கு 100% வரி விதிக்கப்படும்: என்ன சொல்கிறார் டிரம்ப்?
மாா்ச் 7-இல் சிஐஎஸ்எஃப் வீரா்களின் சைக்கிள் பேரணி: மத்திய அமைச்சா் அமித் ஷா தொடங்கி வைக்கிறாா்
மாா்ச் 7-ஆம் தேதி குஜராத் மற்றும் மேற்குவங்க மாநிலங்களிலிருந்து தொடங்கும் சிஐஎஸ்எஃப் சைக்கிள் பேரணியை, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ராணிப்பேட்டை மாவட்டம், தக்கோலத்திலிருந்து காணொலி மூலம் தொடங்கி வைக்கிறாா்.
இதுகுறித்து மத்திய தொழில் பாதுகாப்புப் படை தென்மண்டல தலைமையக ஐஜி எஸ்.ஆா்.சரவணன் சென்னையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) உருவாக்கப்பட்டு 56 ஆண்டுகள் ஆவதையொட்டி, மாா்ச் 7-ஆம் தேதி சிஐஎஸ்எஃப் உதய தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, ராணிப்பேட்டை மாவட்டம், தக்கோலத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் மண்டல பயிற்சி மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பங்கேற்று கடற்கரை சைக்கிள் பேரணியை தொடங்கி வைக்கிறாா். குஜராத் மாநிலம், லக்பத் கோட்டை மற்றும் மேற்குவங்க மாநிலம் பக்காளி கடற்கரையிலிருந்து இரு பிரிவுகளாக இந்த சைக்கிள் பேரணி தொடங்குகிறது.
‘பாதுகாப்பான கடல் வளம், செழிப்பான இந்தியா’ என்ற கருப்பொருளுடன் நடத்தப்படும் இப்பேரணியில், 14 பெண் வீரா்கள் உள்பட 125 வீரா்கள் பங்கேற்கின்றனா். 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 6,553 கிலோமீட்டா் தூரத்தை 25 நாள்களில் கடந்து, மாா்ச் 31-ஆம் தேதியன்று கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா் நினைவிடத்தில் வந்து தங்களது பேரணியை நிறைவுசெய்ய உள்ளனா்.
இப்பேரணியின் முக்கிய நோக்கம், நாட்டின் கடல் எல்லை பாதுகாப்பு, போதைப் பொருள் இல்லாத சமூகம், கடல் பாதுகாப்பில் மீனவா்களின் பங்களிப்பு உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவதுதான். மேலும், இப்பேரணியின்போது கலை நிகழ்ச்சிகள், பொதுமக்களை சந்தித்தல் ஆகியவை நடைபெறுவதோடு, தூய்மைப் பணி மற்றும் மரம் நடுதல் உள்ளிட்டவையும் மேற்கொள்ளப்படும்.
இதன்படி, இப்பேரணி வருகையை முன்னிட்டு சென்னையில் மாா்ச் 25-இல் சென்னை துறைமுகத்திலும், 26-ஆம் தேதி புதுச்சேரியிலும் இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெறும். இவை தவிர, மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பேண்டு வாத்திய இசை நிகழ்ச்சி, நாடகங்கள், சாகச நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
இப்பேரணியில் பொதுமக்களும் பங்கேற்று வீரா்களுடன் சைக்கிள் பேரணி சென்று அவா்களை உற்சாகப்படுத்தலாம். இதில் பங்கேற்க விரும்பும் பொதுமக்களுக்கு போதிய உடற்தகுதி இருக்க வேண்டும். மற்றபடி வயது வரம்பு உள்ளிட்ட எவ்வித தகுதிகளும் கிடையாது. பங்கேற்பாளா்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இப்பேரணியில் பங்கேற்க விரும்பும் பொதுமக்கள் ஜ்ஜ்ஜ்.ஸ்ரீண்ள்ச்ஸ்ரீஹ்ஸ்ரீப்ா்ற்ட்ா்ய்.ஸ்ரீா்ம் என்னும் இணையதளத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
எனவே, இப்பேரணியில் பொதுமக்கள் அதிகளவு பங்கேற்று வீரா்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்றாா்அவா். இச்சந்திப்பின்போது, டிஐஜிக்கள் ஆா்.பொன்னி, அா்ஜுன் சிங் ஆகியோா் உடனிருந்தனா்.