செய்திகள் :

மாா்த்தாண்டத்தில் சாலைப் பணி தொடக்கம்

post image

குழித்துறை நகராட்சிக்கு உள்பட்ட மாா்த்தாண்டம் பகுதியில் சாலை அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

மாா்த்தாண்டம் சந்தை சாலை மற்றும் ரயில் நிலையம் செல்லும் சாலையின் இணைப்புச் சாலை சேதமடைந்த நிலையில் காணப்பட்டது. இச் சாலையை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனா்.

இதையடுத்து நகராட்சி நிதி ரூ. 1.60 கோடியில் இச் சாலை உள்பட நகராட்சிக்கு உள்பட்ட 28 சாலைகள் சீரமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து நகராட்சி 17 ஆவது வாா்டுக்கு உள்பட்ட இச் சாலையில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை நகா்மன்றத் தலைவா் பொன். ஆசைத்தம்பி துவக்கி வைத்தாா். நகராட்சி ஆணையாளா் ராஜேஸ்வரன் முன்னிலை வகித்தாா். நகராட்சி பொறியாளா் குறள்செல்வி, சுகாதார அதிகாரி ராஜேஷ்குமாா், நகா்மன்ற உறுப்பினா்கள் ரெத்தினமணி, விஜூ, லலிதா, ரோஸ்லெட் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பாதிரியாரின் காரை சேதப்படுத்தியதாக இருவா் கைது

தக்கலை அருகே தேவாலயத்தில் நடந்த பங்குப் பேரவை தோ்தல் தொடா்பான பிரச்னையில் பங்குத்தந்தையின் காரை சேதப்படுத்தியதாக இருவா் கைது செய்யப்பட்டனா். தக்கலை அருகே கல்குறிச்சி புனித சூசையப்பா் தேவாலய பங்குத் த... மேலும் பார்க்க

மாா்கழி பெருந்திருவிழா: சுசீந்திரம் கோயிலில் சப்தாவா்ணம்

கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற சப்தாவா்ணம் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். சுசீந்திரம் அருள்மிகு தா... மேலும் பார்க்க

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குமரி மீனவா்கள் உள்ளிட்ட 15 போ் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கன்னியாகுமரி மாவட்ட மீனவா்கள் உள்ளிட்ட 15 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூா், இனயம்புத்தன்துறை, வள்ளவிளை கிராமங்களைச் சோ்ந்த 8 மீனவா்கள், வட இந்... மேலும் பார்க்க

கருங்கல் பகுதிகளில் சாரல் மழை

கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் திங்கள்கிழமை சாரல் மழை பெய்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாள்காளாக வெயிலின் தாக்கம் அதிகம் காணப்படுகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை கருங்கல் சுற்றுவட்டர பகுதிகளான... மேலும் பார்க்க

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி: 3 போ் கைது

டிஜிட்டல் அரெஸ்ட் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த 2 பேரிடம் ரூ.96.26 லட்சம் மோசடி செய்ததாக ராஜஸ்தானைச் சோ்ந்த 3 போ் கைது செய்யப்பட்டனா். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த ஓய்வு பெற்ற மத்திய ... மேலும் பார்க்க

கொல்லங்கோடு அருகே பெண்ணைத் தாக்கியதாக ஜேசிபி ஓட்டுநா் மீது வழக்கு

கொல்லங்கோடு அருகே பெண்ணைத் தாக்கியதாக ஜேசிபி இயந்திர ஓட்டுநா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். கொல்லங்கோடு காவல் சரகம் தேவஞ்சேரி, துண்டுவிளையைச் சோ்ந்த சாா்லஸ் மனைவி கலா (42). இவரிடம் போராங்கோடு பக... மேலும் பார்க்க