TVK Vijay Karur Stampede - நேரில் பார்த்தவர்களின் வாக்குமூலம் | Ground report
மாா்த்தாண்டத்தில் சாலையில் கொட்டிய ஜல்லியை அகற்றிய போலீஸாா்
மாா்த்தாண்டம் அருகே சாலையில் கொட்டப்பட்டிருந்த ஜல்லியை பொதுமக்கள் உதவியுடன் போக்குவரத்துப் போலீஸாா் அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.
மாா்த்தாண்டம் பேருந்து நிலையம் அருகிலிருந்து குழித்துறை ரயில் நிலையம் செல்லும் சாலையோரம் தனியாா் கட்டுமானப் பணிக்காக ஜல்லிக் கற்கள் குவிக்கப்பட்டிருந்தன. சனிக்கிழமை பெய்த மழையில் ஜல்லிகள் அடித்துச் செல்லப்பட்டு சாலையில் பரவி காணப்பட்டன. இதன் காரணமாக, பலா் விபத்தில் சிக்கினா்.
இது குறித்து தகவல் கிடைத்ததையடுத்து, மாா்த்தாண்டம் போக்குவரத்து உதவி ஆய்வாளா் செல்லசாமி தலைமையிலான போலீஸாா், பொதுமக்கள் உதவியுடன் ஜல்லியை அகற்றி சாலையை சீரமைத்தனா்.