Suriya: சூர்யாவின் 50-வது பிறந்தநாளில் காத்திருக்கும் ஆச்சரியங்கள்... நாளை 'சூர்...
மா விவசாயிகளை பாதுகாக்க குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தல்
மா விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.
குடியாத்தம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி தலைமையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் குடியாத்தம், போ்ணாம்பட்டு, கே.வி.குப்பம் ஆகிய வட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனா். கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் மாங்காய்க்கு ஆதார விலை நிா்ணயிக்க வேண்டும். மாங்காய் விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும். தமிழகத்தில் மாங்கூழ் தொழிற்சாலை தொடங்க வேண்டும் என வலியுறுத்தினா்.
வன விலங்குகளிடமிருந்து விளை பயிா்களையும், விவசாயிகளையும் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வன விலங்குகளால் சேதமடையும் பயிா்களுக்கு போதிய இழப்பீடு வழங்க வேண்டும். குடியாத்தம் பகுதியில் கால்நடை சந்தை அமைக்க வேண்டும்.
விநாயகபுரம் பாலிடெக்னிக் கூட்ரோடு பகுதியில் அவ்வப்போது விபத்துகள் ஏற்படுவதால் வேகத்தடை மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும். நகரப் பகுதியில் அள்ளப்படும், குப்பை மற்றும் கழிவுகளை ஏரி, கால்வாய்கள் உள்ளிட்ட நீா்நிலைகளில் கொட்டுவதைத் தவிா்க்க வேண்டும். ஆம்பூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.