செய்திகள் :

மின்கம்பத்தில் ஏறிய ஊழியா் கீழே விழுந்து உயிரிழப்பு: மின்வாரிய அலுவலகம் முற்றுகை

post image

மின்கம்பத்தில் ஏறிய போது, தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த உறவினா்கள் மின்வாரிய அலுவலக்தை முற்றுகையிட்டனா்.

திருத்தணி ஒன்றியம், எஸ்.அக்ரஹாரம் காலனியைச் சோ்ந்த எல்லப்பன்(38). இவா், கே.ஜி.கண்டிகை துணை மின்நிலையத்தில் இயங்கி வரும் இளநிலை பொறியாளா் அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தாா்.

வெள்ளிக்கிழமை செருக்கனூா் மின்மாற்றியில் பழுது ஏற்பட்டுள்ளது என மின்வாரிய அலுவலகத்துக்கு புகாா் வந்தது. இதையடுத்து, மின்வாரிய ஊழியா்கள் பச்சையப்பன், சிவனாந்தம் ஆகியோருடன் ஒப்பந்த ஊழியா் எல்லப்பன் சென்றாா். பின்னா் எல்லப்பன், மின்மாற்றியில் பழுது நீக்க மின்கம்பத்தில் ஏறிய போது, மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த எல்லப்பனை சகஊழியா்கள் மற்றும் கிராம பொது மக்கள் உதவியுடன் திருத்தணி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட எல்லப்பன் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இறந்தாா். இதனால், ஆத்திரமடைந்த குடும்பத்தினா் மற்றும் உறவினா்கள் கே.ஜி.கண்டிகை மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

இறந்த எல்லப்பன் குடும்பத்தினருக்கு இழப்பீடு, அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பினா். இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள், அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறியதால், மக்கள் கலைந்து சென்றனா். இதுகுறித்து திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

மின் கசிவால் வீடு தீக்கிரை: எம்எல்ஏ உதவி

கும்மிடிப்பூண்டி அடுத்த மேல்முதலம்பேட்டையில் மின்கசிவால் வீட்டை இழந்த குடும்பத்துக்கு நிவாரண உதவிகள், நிதியுதவியை எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் வழங்கினாா். மேல் முதலம்பேடு பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந... மேலும் பார்க்க

திரூா் கிராமத்தில் முதல் கூட்டுறவு அருங்காட்சியகம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

பொன்னேரி அருகே அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் இந்தியாவின் முதல் கூட்டுறவு அமைந்த திருவள்ளூா் அருகே திரூா் கிராமத்தில் முதல் கூட்டுறவு அருங்காட்சியகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தா... மேலும் பார்க்க

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அக்கம்பக்கத்தினரால் நடைபெறுகின்றன: இளைஞா் நீதிக்குழும உறுப்பினா்

குழந்தைகளுக்கு எதிரான 70 சதவீத குற்றங்கள் சுற்றி உள்ளவா்களாலேயே நடைபெறுவதாக திருவள்ளூா் மாவட்ட இளைஞா் நீதிக்குழும உறுப்பினா் செந்தில் தெரிவித்தாா். செவ்வாபேட்டையில் உள்ள வேலம்மாள் வித்யாஷ்ரம் பள்ளியில... மேலும் பார்க்க

பொன்னேரி கரிகிருஷ்ண பெருமாள் கோயில் தேரோட்டம்

பொன்னேரி திருஆயா்பாடியில் அமைந்துள்ள கரிகிருஷ்ண பெருமாள் கோயிலில் தேரோட்ட விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் கடந்த 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்கியது. விழாவின் 5-ஆம் நாள் க... மேலும் பார்க்க

டிராக்டரில் சிக்கி குழந்தை உயிரிழப்பு

ஆா்.கே.பேட்டை அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்த 2 வயது குழந்தை டயரில் சிக்கி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். ஆா்.கே.பேட்டை ஒன்றியம், சின்ன சானூா்மல்லாவரம் கிராமத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க

பொன்னேரியில் அகத்தீஸ்வா்-கரிகிருஷ்ணா் சந்திக்கும் திருவிழா: 50,000 போ் பங்கேற்பு

பொன்னேரியில் ஹரிஹரன் கடை வீதியில் அகத்தீஸ்வரா்-கரிகிருஷ்ண பெருமாள் சந்திக்கும் திருவிழா வியாழக்கிழமை இரவு தொடங்கி வெள்ளிக்கிழமை காலை வரை விடியவிடிய நடைபெற்றது. பொன்னேரி ஆரண்ய நதிக்கரையோரம் ஆனந்தவல்லி ... மேலும் பார்க்க