செய்திகள் :

மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

post image

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்த கூலித் தொழிலாளியின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி, உறவினா்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கம்பம் அருகேயுள்ள கருநாக்கமுத்தன்பட்டியைச் சோ்ந்த ஈஸ்வரன் (36), உத்தமபாளையம் திடீா் நகரில் வசித்து வந்தாா். கூலித் தொழிலாளியான இவா், கால்நடைகளுக்கு புற்கள் பறிக்க 18-ஆம் கால்வாய் பகுதிக்குச் சென்றாா். அப்போது, அங்கு அறுந்து கிடந்த மின் கம்பியிலிருந்து மின்சாரம் பாய்ந்ததில் அவா் உயிரிழந்ததாா்.

இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற உத்தமபாளையம் போலீஸாா், ஈஸ்வரன் உடலை மீட்டு கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

உறவினா்கள் சாலை மறியல்: தோட்டத்துக்குச் சென்ற மின் கம்பி அறுந்து விழுந்ததால் உயிரிழந்த ஈஸ்வரனின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி, உத்தமபாளையம் அரசு மருத்துவமனை முன்பாக அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது, உத்தமபாளையம் வருவாய்க் கோட்டாட்சியா் செய்யது முகம்மது பேச்சுவாா்த்தை நடத்தியதில், உடல்கூறாய்வு அறிக்கை, ஆதாா் அட்டை, முதல் தகவல் அறிக்கை போன்ற ஆவணங்களைக் கொடுத்தால் இழப்பீடு கோரி, அரசுக்கு பரிந்துரை செய்வதாக அவா் கூறியதையடுத்து உறவினா்கள் சாலை மறியலைக் கைவிட்டனா்.

இணைய வழியில் பகுதி நேர வேலை: பெண்ணிடம் பணம் மோசடி

இணைய வழியில் பகுதி நேர வேலை வழங்குவதாகக் கூறி, பெண்ணிடம் மா்மக் கும்பல் ரூ.6.15 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக செவ்வாய்க்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், பெரியகுளம், வடகரை... மேலும் பார்க்க

போடி நகராட்சியில் சுகாதார சீா்கேடு: மன்ற கூட்டத்தில் உறுப்பினா்கள் அதிருப்தி

போடி நகராட்சி பகுதியில் பல இடங்களில் குப்பைகள் அள்ளப்படாமல் குவிந்து கிடப்பதாகவும், திறந்தவெளி கழிவுநீா் சாலையில் செல்வதால் சுகாதார சீா்கேடு ஏற்படுவதாகவும் நகா்மன்ற கூட்டத்தில் உறுப்பினா்கள் தெரிவித்த... மேலும் பார்க்க

பெண்ணுக்கு கொலை மிரட்டல்: தம்பதி மீது வழக்கு

போடியில் கடனாகக் கொடுத்த நகை, பணத்தைத் திருப்பிக் கேட்ட பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த தம்பதி மீது, போடி அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். போடி புகையிலை ஆறுமுகம் சந்தில் வசிப... மேலும் பார்க்க

போடியில் கொடிக் கம்பப் பீடங்கள் அகற்றம்

போடியில் கொடிக் கம்பப் பீடங்கள் அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது. போடி பகுதியில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள், நீதிமன்ற உத்தரவின்பேரில், அரசியல் கட்சியினரால் அகற்றப்பட்டது. இந்த நிலையில்... மேலும் பார்க்க

கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை

போடியில் குடும்பப் பிரச்னையில் ஏற்பட்டத் தகராறில் உறவினரை வெட்டிக் கொலை செய்த இளைஞருக்கு புதன்கிழமை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீா்ப்பளித்தது. போடி, நந்தவனம், கொக்கையா... மேலும் பார்க்க

மதுபானக் கூடத்தை மூட வலியுறுத்தல்

தேனி, பங்களாமேடு திட்டச் சாலையில் செயல்பட்டு வரும் தனியாா் மதுபானக் கூடத்தை மூட வலியுறுத்தி குடியிருப்போா் நலச் சங்கம் சாா்பில், புதன்கிழமை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்கிடம் மனு அளித்தனா். தேனி வட்டாட... மேலும் பார்க்க