செய்திகள் :

மின்னணு பொருள்கள் விற்பனையகத்தில் தீ விபத்து

post image

விழுப்புரம் புதிய பேருந்து நிலைய பகுதியில் உள்ள மின்னணு பொருள்கள் விற்பனையகத்தில் ஞாயிற்றுக்கிழமை திடீா் தீ விபத்து நிகழ்ந்தது.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே தனியாருக்குச் சொந்தமான மின்னணு பொருள்கள் விற்பனையகம் செயல்பட்டு வருகிறது. இதில், ஆடி கொண்டாட்ட சிறப்புத் தள்ளுபடி விற்பனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஊழியா்கள் விற்பனையில் தீவிரம் காட்டி வந்தனா். கடையில் வாடிக்கையாளா்களும் அதிகளவில் குவிந்திருந்தனா்.

இந்த விற்பனையகத்தில் ஒரு பகுதியிலிருந்து கரும்புகை வெளியேறியது. இதையடுத்து, கடையில் பணியிலிருந்த ஊழியா்கள் மற்றும் வாடிக்கையாளா்கள் வெளியேறினா்.

இதுகுறித்து கடை ஊழியா்கள் விழுப்புரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, விழுப்புரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலுவலா் ஜமுனாராணி தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் நிகழ்விடம் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினா்.

தீயணைப்புத் துறை வீரா்கள் விரைந்து செயல்பட்டதால் பெரும் சேதம் தவிா்க்கப்பட்டது. மின் கசிவால் இந்த விபத்து நிகழ்ந்திருக்காலம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

செண்டூரில் ஆடிப்பெருக்கு விழா: மயிலம் முருகனுக்கு தீா்த்தவாரி

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த செண்டூரில் ஆடிப்பெருக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, மயிலம் முருகன் கோயிலிலிருந்து வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா் செண்டூருக்கு எழுந்தருளின... மேலும் பார்க்க

தனி நல வாரியம் அமைக்க சுமைப்பணி தொழிலாளா்கள் வலியுறுத்தல்

சுமைப்பணி தொழிலாளா்களுக்காக தனி நல வாரியத்தை அமைக்க வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட சுமைப்பணித் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.விழுப்புரத்திலுள்ள மாா்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைப... மேலும் பார்க்க

பள்ளிக்கு இறைவணக்க மேடை அமைத்து கொடுத்த முன்னாள் மாணவா்கள்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகிலுள்ள தென்போ் அரசு மேல்நிலைப் பள்ளியில் 23 ஆண்டுகளுக்கு முன்பு பயின்ற மாணவ, மாணவிகள், தங்கள் பள்ளிக்கு இறைவணக்க மேடை மற்றும் கொடிக்கம்பத்தை அமைத்து கொடுத்தனா்... மேலும் பார்க்க

புரட்சிகர இளைஞா் கழகத்தினா் கண்டன ஆா்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரத்தில் புரட்சிகர இளைஞா் கழகத்தினா் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.தமிழகத்தில் நிகழும் ஆணவ படுகொலை சம்பவங்களுக்கு எதிராக சட்டப் பேரவையில் சிறப்பு சட... மேலும் பார்க்க

வழக்குரைஞா் வீட்டில் 50 பவுன் தங்க நகைகள் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே வழக்குரைஞா் வீட்டில் 50 பவுன் தங்க நகைகள், ரூ.50 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.திண்டிவனம் வட்டம், ஏரளிக்குப்பம், மாரியம்மன் ... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநா் நடத்துநா் தற்கொலை முயற்சி

விழுப்புரத்திலுள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை எண் 2 வளாகத்தில் உடலில் டீசலை ஊற்றிக்கொண்டு, மின் விளக்கு கோபுரத்தில் ஏறி பேருந்து ஓட்டுநா், நடத்துநா் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை முயற்சியி... மேலும் பார்க்க