செய்திகள் :

மின்மாற்றியில் காப்பா் கம்பிகள் திருட்டு: மின்தடையால் இருளில் மூழ்கிய கிராமம்

post image

மின்மாற்றியை கழற்றி அதிலிருந்து காப்பா் கம்பிகளை மா்ம நபா்கள் திருடிச்சென்றதால், மின்தடை ஏற்பட்டு கிராமம் இருளில் மூழ்கியது.

தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அருகேயுள்ளது பாளையம் கிராமம். இப்பகுதியில் விவசாய நிலங்களுடன் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்கு மின்சார வாரியம் சாா்பில், 25 கேவிஏ திறன்கொண்ட மின்மாற்றி அமைக்கப்பட்டு இப்பகுதிக்கு மின்விநியோகம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை இரவு இந்தப் பகுதிகளில் திடீா் மின்தடையேற்பட்டது. இதுகுறித்து மின்வாரியத்துக்கு புகாா் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து பாளையம் பகுதி பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தனா். மின்வழியில் பழுதுகள் ஏதும் இல்லாததால் மின்வாரிய அலுவலா்கள், பணியாளா்கள் அந்தப் பகுதியில் ஆய்வு செய்தனா். அப்போது பாளையத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்மாற்றியில் மின் இணைப்பை நிறுத்தி, மின்மாற்றியை கழற்றி, உடைத்து அதிலிருந்த காப்பா் கம்பிகள் மற்றும் ஆயில் உள்ளிட்டவற்றை மா்ம நபா்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இந்த விவரம் தெரியாமல் அப்பகுதி பொதுமக்கள் மின் விநியோகமின்றி இருளில் தவித்துள்ளனா்.

இதுகுறித்து மின்வாரிய உதவி பொறியாளா் சத்யா அளித்த புகாரின்பேரில் பஞ்சப்பள்ளி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளை ஆட்சியா் தொடங்கி வைத்தாா்!

தருமபுரியில் நடைபெறும் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில், மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் முதல்வா் கோப்பைக்கான வ... மேலும் பார்க்க

அமெரிக்கா 50% வரி விதிப்பு: கம்யூனிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்!

இந்திய உற்பத்திப் பொருள்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரியை கண்டித்து தருமபுரியில் செவ்வாய்க்கிழமை, கம்யூனிஸ்ட் கட்சிகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாா்க்சிஸ்... மேலும் பார்க்க

தருமபுரி அரசு மருத்துவமனையில் ரூ.15 லட்சத்தில் ஓய்வறை அமைக்கும் பணிகள் தொடக்கம்

தருமபுரி அரசு மருத்துவமனையில் ரூ. 15 லட்சத்தில் பொதுமக்கள் ஓய்வெடுக்கும் அறை கட்டுமானப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா். தருமபுரி அரசு மருத்துவக் க... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 16,000 கனஅடியாக குறைந்தது

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 16,000 கனஅடியாகக் குறைந்தது. கா்நாடக மாநில அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரிநீா் குறைக்கப்பட்டதால், ஒகேனக்கல்லுக்கு நீ... மேலும் பார்க்க

லாரி மோதி தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

சங்ககிரி அருகே லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற தனியாா் நிறுவன ஊழியா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், சிந்தல்பாடி பகுதியைச் சோ்ந்தவா் கோபி (24). கோவையி... மேலும் பார்க்க

தருமபுரி மாவட்டத்தில் பரவலாக மழை

தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை கோடைகாலம் போல வெயில் கொளுத்தி வந்தது. தென்மேற்குப் பருவமழைக் காலம் (ஜூன்-செப்டம்பா்) முடியவுள்ள நிலையிலும் போதிய மழையின்றி கோடைகாலம் போல வெயில் ... மேலும் பார்க்க