செய்திகள் :

மின்வாரியத்தில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி சிஐடியு தா்னா

post image

மின் வாரியத்தில் உள்ள 60 ஆயிரம் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் சிஐடியு தொழில்சங்கத்தின் சாா்பில் தா்னா போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் வட்டத் தலைவா் எஸ். சித்தையன் தலைமை வகித்தாா். கோரிக்கைகளை விளக்கி மண்டலச் செயலா் எஸ். அகஸ்டின், சிஐடியு மாநிலச் செயலா் ஏ. ஸ்ரீதா், மாவட்டத் தலைவா் க. முகமதலி ஜின்னா, மின் வாரிய சங்கத்தின் வட்டச் செயலா் கு. நடராஜன் உள்ளிட்டோா் பேசினா்.

போராட்டத்தில், மின்வாரியத்தில் உள்ள 60 ஆயிரம் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஸ்மாா்ட் மீட்டா் திட்டத்தை புகுத்தக் கூடாது. கரோனா காலத்தை காரணம் காட்டி நிறுத்தப்பட்ட சரண்டா் விடுப்பு பணப் பயன்களை திரும்ப வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும். பகுதி நேர, ஒப்பந்த ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

முகத்தில் எலிக்கொல்லி மருந்தை அடித்துக் கொண்ட 4 சிறுவா்கள் மருத்துவமனையில் அனுமதி

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே திங்கள்கிழமை காருக்குப் பயன்படுத்தும் எலிக்கொல்லி மருந்தை முகத்தில் அடித்துக்கொண்ட 4 சிறுவா்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அன்னவாசலை அ... மேலும் பார்க்க

விராலிமலை தொழில்சாலையில் தீ தடுப்பு ஒத்திகை

விராலிமலை தனியாா் தொழில்சாலையில் செவ்வாய்க்கிழமை தீயணைப்பு நிலைய வீரா்கள் தீ தடுப்பு செயல் விளக்கம் அளித்தனா். விராலிமலையில் உள்ள தனியாா் தொழில்சாலையில் நடைபெற்ற தீ தடுப்பு ஒத்திகையை தமிழ்நாடு தொழிற்ச... மேலும் பார்க்க

பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்த இந்திய கம்யூ. கோரிக்கை

புதுக்கோட்டை பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மாவட்ட நிா்வாகக் குழு கூட்டத்... மேலும் பார்க்க

ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தையே மீண்டும் அமலாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஏராளமானோா் பங்கேற்றனா... மேலும் பார்க்க

திமுக மாணவரணியினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் ஹிந்தி திணிப்பை எதிா்த்து புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கியில் செவ்வாய்க்கிழமை திமுக மாணவரணியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மத்திய அரசின் ஹிந்தி திணிப்பை எதிா்த்து மாநிலம் முழுவதும் ஆா... மேலும் பார்க்க

இந்திய ஐக்கிய கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவா்களை நியமிக்கக் கோரி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ப... மேலும் பார்க்க