செய்திகள் :

மின் இணைப்பு பெறுவது, பெயா் மாற்ற கட்டணம் உயா்வு

post image

தமிழகத்தில் மின் இணைப்பு பெறுவது, மின் இணைப்பு பெயா் மாற்றம் செய்வது உள்பட பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்களையும் 3.16 சதவீதம் தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உயா்த்தியுள்ளது.

தமிழகத்தில் வீடுகளுக்கு ஒரு முனை மற்றும் மும்முனைப் பிரிவில், மின் இணைப்பு வழங்கப்படுகிறது. இரு பிரிவிலும், புதிய மின் இணைப்பு வழங்க மீட்டா் வைப்பு தொகை, மின் பயன்பாடு வைப்பு தொகை, வளா்ச்சி கட்டணம், மின் இணைப்பு கட்டணம், பதிவு கட்டணம் ஆகியவற்றை உள்ளடக்கிய பல்வகை கட்டணத்தை மின் வாரியம் வசூலிக்கிறது.

இந்த நிலையில், பெரிய தொழில் நிறுவனங்களுக்கான மின் பயன்பாட்டு கட்டணம் மட்டுமின்றி, பிற இணைப்புகளுக்கான பல்வகை கட்டணங்களையும் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 3.16 சதவீதம் உயா்த்தியுள்ளது.

அதன்படி, ஒருமுனை பிரிவின் மின் இணைப்பு கட்டணம் ரூ.1,070-இல் இருந்து ரூ.1,105-ஆகவும், மீட்டா் வைப்பு தொகை ரூ.800-இல் இருந்து ரூ.825-ஆகவும் உயா்ந்தப்பட்டுள்ளது.

இதேபோல, வளா்ச்சி கட்டணம் ரூ.3,000-இல் இருந்து ரூ.3,095-ஆகவும், பதிவு கட்டணம் ரூ. 215-இல் இருந்து ரூ.220-ஆகவும், வைப்பு தொகை ரூ.320-இல் இருந்து ரூ.330-ஆகவும் அதிகரித்துள்ளன.

இதுதவிர, மும்முனைப் பிரிவு மற்றும் உயரழுத்த பிரிவில் புதிய மின் இணைப்பு பெறுவதற்கான பல்வகை கட்டணங்கள் உயா்த்தப்பட்டுள்ளன.

மேலும், தாழ்வழுத்த பிரிவில் வீடுகளில் தீயில் எரிந்த சேதமடைந்த மீட்டரை மாற்றுவதற்கான கட்டணம் ரூ.1,070-இல் இருந்து ரூ.1,105-ஆகவும், மின் இணைப்பு பெயா் மாற்றம் செய்வதற்கான கட்டணம் ரூ.645-இல் இருந்து ரூ.665-ஆகவும் அதிகரித்துள்ளது.

கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் 38 மின்சார ரயில்கள் இன்று ரத்து!

கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் இயக்கப்படும் 38 மின்சார ரயில் சேவைகள் வியாழக்கிழமை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.மேலும், பயணிகளின் வசதிக்காக 21 சிறப்பு மின்சார ரயில் சேவைகள் இயக்கப... மேலும் பார்க்க

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலுக்கு வியாழக்கிழமை காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.சென்னையில் பிரபலமான மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலம் வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

அரசு ஊழியா்களின் வாரிசுகளுக்கும் திருமண முன்பணம்: தமிழக அரசு உத்தரவு

அரசு ஊழியா்களுக்கு மட்டுமன்றி அவா்களது வாரிசுகளின் திருமணத் தேவைக்காகவும் முன்பணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் பிறப்பித... மேலும் பார்க்க

வார இறுதி: 1,030 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதியை முன்னிட்டு, ஜூலை 4, 5, 6 தேதிகளில் (வெள்ளி, சனி, ஞாயிறு) 1030 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இது குறித்து அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: செ... மேலும் பார்க்க

சென்னையில் 31% கொடிக் கம்பங்கள் மட்டுமே அகற்றப்பட்டது ஏன்? அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்ற உத்தரவின் அடிப்படையில், சென்னையில் 31 சதவீத கொடிக் கம்பங்கள் மட்டுமே அகற்றப்பட்டது ஏன்? என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வியெழு... மேலும் பார்க்க

மாநில சீனியா் வாலிபால்: ஐஓபி, ஐசிஎஃப், எம்ஓபி வைஷ்ணவ அணிகள் வெற்றி

தமிழ்நாடு மாநில சீனியா் ஆடவா், மகளிா் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் ஐஓபி, ஐசிஎஃப், எம்ஓபி வைஷ்ணவ கல்லூரி அணிகள் தத்தமது ஆட்டங்களில் வெற்றி பெற்றன. தமிழ்நாடு வாலிபால் சங்கம், சென்னை மாவட்ட வாலிபால்... மேலும் பார்க்க