செய்திகள் :

தஞ்சாவூர்: ஜெயலலிதாவின் முன்னாள் உதவியாளர் வீட்டு விசேஷம்!

post image

தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெ.ஜெயலலிதாவின் பர்சனல் செகரடரியாக இருந்த ரவிராஜின் மகள் திருமண நிச்சயதார்த்தம் நேற்று முன் தினம் தஞ்சாவூரில் நடைபெற்றது. ரொம்பவே சிம்பிளாக நடந்த இந்த நிகழ்ச்சியில் சுமார் நூறு பேர் வரை கலந்து கொண்டதாகச் சொல்கிறார்கள்.
எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்த காலத்திலேயே ஜெ..ஜெயலலிதாவின் பர்சனல் செகரட்டரியாக இருந்தவர் ரவிராஜ். தஞ்சாவூரைச் சேர்ந்த இவர் ஜெ.யிடம்  பல ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்தார். அதாவது ஜெயலலிதா அரசியலில் நுழைந்த காலத்திலிருந்து 91ம் ஆண்டு முதல் முறை முதல்வரானது வரை இவர் ஜெ.யின் செகரட்டரியாக இருந்தார்..

jeyalalitha
ரவிராஜ் இல்ல விஷேசம்

ஜெயலலிதா முதல்வரான பிறகு சில பல காரணங்களால் போயஸ் கார்டனை விட்டு வெளியேறிய இவர் பத்திரிகையாளராகவும் சில  காலம் சென்னையில் பணிபுரிந்தார். கவிதைகளும் எழுதுபவர் என்பதால் நட்பு வட்டத்தினர் இவரை கவிஞர் என்கிறார்கள்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தஞ்சாவூருக்கே சென்று விட்டவர் தற்போது அங்குதான் வசித்து வருகிறார்.

raviraj

இந்நிலையில் இவரது மகள் லட்சுமி பிரபாவுக்கும் மன்னார்குடியைச் சேர்ந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகி அர்ஜுனனின் மகன் பிரேம் குமாருக்கும் திருமணம் நிச்சயிக்கப் பட்டது. இந்த திருமணா நிச்சயதார்த்த நிகழ்வு ரவிராஜின் வீட்டில் வைத்தே சிம்பிளாக நடைபெற்றது. பிரேம் குமார் பொறியாளராக இருக்கிறார். லட்சுமி பிரபா ஆர்க்கிடெக்டாம். அதிமுக-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அமமுக-வைச் சேர்ந்த இந்நாள் நிர்வாகிகள் என பலரும் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்களாம். திருமணம் அடுத்த சில மாதங்களில் இருக்குமென்கிறார்கள்.

அஜித்குமார் வழக்கு: மோசடி பேர்வழியா நிகிதா? |கூட்டணி பலம்: EPS PLAN | VIJAY Imperfect show 3.7.2025

* அஜித்குமார்: அரசு வேலை வாங்கித் தருவதாகப் பல பேரிடம் பல லட்சம் மோசடி; நிகிதா மீது குவியும் புகார்கள்?* ''இந்த குடும்பம் நாசம் பண்ணிட்டாங்க''- கண்ணீர் விட்டு கதறி அழுத ஆசிரியர்! * அஜித்குமார் கொலை வழ... மேலும் பார்க்க

'நிகிதா'-வுக்கு உதவிய அதிகாரி யார்? Stalin-க்கு லாக் போடும் EPS & Vijay! | Elangovan Explains

சிவகங்கை திருபுவனத்தில் போலீசாரால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட அஜித்குமார். இதில் அஜித் குமார் மீது புகார் கொடுத்த நிகிதா யார்? 14 ஆண்டுகளுக்கு முன்பு அவர் மீது '420' கேஸ் போடப்பட்டு உள்ளது என பகீர் பின்... மேலும் பார்க்க

'சமூக ஆர்வலர்கள், திரைத்துறையினர் அஜித்குமார் மரணம் பற்றி வாய்திறக்காதது ஏன்?'- ஜெயக்குமார் கேள்வி

சிவகங்கை அருகே காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞர் மரணமடைந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த சம்பவத்திற்கு எதிராக அரசியல் தலைவர்கள் குரல் கொ... மேலும் பார்க்க

"அஜித்குமாரை சித்ரவதைச் செய்ய ஆணையிட்ட காவல் உயரதிகாரி யார்?" - அன்புமணி கேள்வி

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் அஜித்குமார் என்பவர் தனிப்படை போலீஸாரின் சித்ரவதையால் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார்.பின்னர் இது கொலை வழக்காகப் பதிவுசெய்யப்பட்டு, இதில் ஈடுபட்ட போலீஸார் 5 பேர் கைதுச... மேலும் பார்க்க

'என் உயிரே போனாலும் பரவாயில்ல...' - அஜித் குமார் வழக்கின் சாட்சி சக்தீஸ்வரன் பரபரப்பு பேட்டி

சிவகங்கை மடப்புரத்தில் போலீஸாரின் சித்ரவதையால் உயிரிழந்த அஜித் குமாரின் வழக்கில் சக்தீஸ்வரன் என்பவர் முக்கிய சாட்சியாக மாறியிருக்கிறார். அஜித் குமாரை காவலர்கள் தாக்கும் சம்பவத்தை சக்தீஸ்வரன் வீடியோ எட... மேலும் பார்க்க

பாமக: "அருளை நீக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உண்டு; என் மனது வேதனைப்படும் அளவுக்கு..." - ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சியில் தற்போது உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அதன் தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக கட்சி இரண்டு அணிகளாகச் ... மேலும் பார்க்க