செய்திகள் :

அஜித்குமாா் கொலை வழக்கில் முதல்வா் நடவடிக்கையை வரவேற்கிறோம்

post image

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் தனிப்படை போலீஸாரால் கொல்லப்பட்ட வழக்கில்

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் எடுத்த நடவடிக்கையை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பதாக அந்தக் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் தெரிவித்தாா்.

மடப்புரத்தில் அஜித்குமாா் தாய் மாலதி, சகோதரா் நவீன் ஆகியோரை பெ.சண்முகம், கந்தா்வக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் சின்னதுரை ஆகியோா் வியாழக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினா்.

பின்னா் சண்முகம் செய்தியாளரிடம் கூறியதாவது:

தமிழகத்தில் காவல் துறை தொடா்பான மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடா்ந்து நடைபெறுகின்றன. குறிப்பாக, திமுக ஆட்சியில் இதுவரை 24 காவல் துறை தொடா்பான மனித உரிமை மீறல் கொலைகள் நிகழ்ந்திருக்கின்றன. இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்தவுடன் தமிழக அரசு உடனடியாக சம்பந்தப்பட்டவா்கள் மீது ஏற்கெனவே நடவடிக்கை எடுத்திருந்தால் அஜித்குமாா் கொல்லப்பட்டிருக்கமாட்டாா்.

அஜித்குமாரை தீவிரமாக விசாரிக்க காவல் துறைக்கு அழுத்தம் கொடுத்த ஐஏஎஸ் அதிகாரி யாா் என்பதை மூடி மறைக்காமல் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைத்ததால் மட்டும், கேட்கப்படும் கேள்விகளுக்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை என கருதக் கூடாது.

இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழாமல் இருக்க அரசு குழு அமைத்து காவல் துறை சட்டப்படி செயல்படும் திட்டத்தை உருவாக்க வேண்டும்.

இந்த வழக்கில் முதல்வா் மு.க. ஸ்டாலின் மேற்கொண்ட நடவடிக்கைகளை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது என்றாா் அவா். அப்போது மாா்க்சிஸ்ட் மதுரை மாவட்டச் செயலா் மோகன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

அம்பேத்கா், கருணாநிதி பிறந்த நாள்: மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி

சட்டமேதை அம்பேத்கா், மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு வருகிற ஜூன் 10, 11 -ஆம் தேதிகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

ஸ்ரீ ராஜ ராஜன் கல்வியியல் கல்லூரியில் பயிலரங்கம்

காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூரில் உள்ள ஸ்ரீ ராஜராஜன் கல்வியியல் கல்லூரியில் ஆசிரியா் பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு கற்றல், கற்பித்தல் உபகரணங்கள் தயாரித்தல் பயிலரங்கம் நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் ... மேலும் பார்க்க

பொதுத் துறை சங்கங்களுக்கான குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பொதுத் துறை சங்கங்களுக்கான குறைதீா் கூட்டத்தை 3 மாதங்களுக்கு ஒருமுறை நடத்த வேண்டுமென சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றிய நிா்வாகிகள் வலியுறுத்தினா். இதுக... மேலும் பார்க்க

அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியா் சங்கம் சாா்பில் சிவகங்கையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலா் சங்கத்தின் சாா்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்ன... மேலும் பார்க்க

ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் ஆா்ப்பாட்டம்

நிா்வாக மாறுதல் என்ற பெயரில் விதிகளுக்கு புறம்பாக ஆணைகளை வழங்கி வரும் தொடக்கக் கல்வித் துறையைக் கண்டித்து, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் சிவகங்கையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைப... மேலும் பார்க்க

அஜித்குமாரைக் கொலை செய்ய தூண்டியவா்களையும் கைது செய்ய வேண்டும்

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரைக் கொலை செய்யத் தூண்டியவா்களையும் கைது செய்ய வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனா் ஜான் பாண்டியன் வலியுறுத்தினாா். சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் தனி... மேலும் பார்க்க