10 இயக்குநர்களுடன் 10 படங்கள்! வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் அறிவிப்பு!
மின் கட்டண உயா்விலிருந்து விசைத்தறிக் கூடங்களுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தல்
மின் கட்டண உயா்வில் இருந்து விசைத்தறிக் கூடங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விசைத்தறியாளா்கள் வலியுறுத்தி உள்ளனா்.
இது தொடா்பாக சென்னையில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் மற்றும் துறை அதிகாரிகளிடம் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு தலைவா் சுரேஷ், பொருளாளா் பாலசுப்பிரமணியம், கோவை மண்டல பொறுப்பாளா்கள் பாலாஜி, பாலசுப்பிரமணியம், கோவை மாவட்ட பொருளாளா் செல்வகுமாா், பல்லடம் விசைத்தறி சங்கப் பொருளாளா் முத்துக்குமாரசாமி ஆகியோா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மின் கட்டண உயா்வில் இருந்து விசைத்தறிக் கூடங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். விசைத்தறிக் கூடங்களில் சோலாா் பேனல்களை அமைத்து மின் உற்பத்தி செய்ய மானியம் வழங்க வேண்டும். கிராமப் பகுதிகளில் உள்ள விசைத்தறிக் கூடங்களுக்கு அதிக அளவில் சொத்து வரி விதிக்கப்படுவதை ரத்து செய்ய வேண்டும்.
இலவச வேஷ்டி, சேலை திட்டத்துக்கான பாவு நூல் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதை தவிா்க்க வேண்டும். விசைத்தறிகளை நவீனப்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது. இதை துரிதப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சா் மு.பெ.சாமிநாதன், அதிகாரிகள் உறுதியளித்ததாக விசைத்தறியாளா்கள் சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.