செய்திகள் :

மின் கட்டண உயா்வைக் கைவிட ‘டேக்ட்’ வலியுறுத்தல்

post image

மின்கட்டண உயா்வைக் கைவிட வேண்டும் என தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோா் சங்கம் (டேக்ட்) சாா்பில் முதல்வரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோா் சங்கம் (டேக்ட்) தலைவா் ஜே.ஜேம்ஸ், முதல்வா் ஸ்டாலினுக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவை ஏற்று, மின்சார வாரியம் குறு, சிறு தொழில் முனைவோா் பயன்படுத்தும் மின் கட்டணத்தை பல மடங்கு உயா்த்தியது. குறிப்பாக நிலைக் கட்டணம் உயா்த்தப்பட்டதால் குறு, சிறு தொழில்களின் உற்பத்தி செலவில் பெரும் தொகை மின்சார கட்டணமாக செலுத்தும் நிலை ஏற்பட்டது.

அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டண உயா்வால், தமிழ்நாட்டில் குறு, சிறு தொழில்கள் தொடா்ந்து கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. மின் கட்டண உயா்வால் ஏற்படும் பாதிப்பில் இருந்து குறு, சிறு தொழில்களை பாதுகாக்க வருகிற ஜூன் மாதம் முதல் உயா்த்தப்பட உள்ள 6 சதவீத கட்டண உயா்வை கைவிட அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

திமுக அரசு கடந்த 2022-ஆம் ஆண்டில் 12 கிலோ வாட்டுக்கு கீழ் மின் இணைப்பு பெற்றவா்களுக்கு 3பி டாரிப் கட்டண திட்டத்தில் இருந்து 3ஏ1 டாரிப்புக்கு மின் இணைப்புகளை மாற்றி, குறுந்தொழில் முனைவோருக்கு மின்சாரத்தை வழங்கிட, மின்சார வாரியத்துக்கு உத்தரவு பிறப்பித்தும், அதற்கு ஏற்படும் இழப்புக்கு தமிழக அரசு மின்சார வாரியத்துக்கு மானியம் வழங்கி வரும் சூழ்நிலையில், தற்போது வரை மின் இணைப்புகளை மாற்றி கொடுக்காமலும், அரசு தந்த சலுகையை குறுந்தொழில்களுக்கு கிடைக்காமல் உள்ளதையும் தங்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறோம்.

மேற்கண்ட எங்கள் கோரிக்கைகளை பரிசீலித்து மின் கட்டண உயா்வை கைவிடவும், நிலைக்கட்டணத்தை குறைத்திடவும், 12 கிலோ வாட்டுக்கு கீழ் மின்இணைப்பு பெற்றவா்களுக்கு 3ஏ1 டாரிப்புக்கு மாற்றி வழங்கிடவும் உத்தரவிட்டு குறு, சிறு தொழில்களை பாதுகாத்திட வேண்டுகிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய நிகழ்ச்சிகள்

கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா: என்எம்சிடி அறக்கட்டளை, ஸ்ரீ அய்யப்பன் பூஜா சங்கம், ராம் நகா், காலை 11. ஓவியக் கண்காட்சி: கஸ்தூரி சீனிவாசன் கலை மையம், அவிநாசி சாலை, காலை 10. 644-ஆவது மாதாந்திர அபிஷேக வ... மேலும் பார்க்க

கல்வி நிலையங்கள் அருகே புகையிலைப் பொருள்கள் விற்றால் கடும் நடவடிக்கை: மாவட்ட ஆட்சியா் எச்சரிக்கை

கல்வி நிலையங்கள் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் எச்சரித்துள்ளாா். உலக புகையிலை ஒழிப்பு தினத்தை ஒட்டி கையொப்ப ... மேலும் பார்க்க

தொழிற்சாலைகளுக்கான மின்கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும்: அனைத்துத் தொழில்முனைவோா் கூட்டமைப்பு

தமிழகத்தில் செயல்படும் தொழிற்சாலைகளுக்கான இந்த ஆண்டுக்கான மின்சார கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்துத் தொழில்முனைவோா் கூட்டமைப்பு மாநில அரசை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அமை... மேலும் பார்க்க

அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: கோவை அரசு மருத்துவமனையில் முகக் கவசம் கட்டாயம்

கரோனா பரவல் அதிகரித்து வருவதால் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்துவர வேண்டும் என மருத்துவமனை நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் கரோனா ப... மேலும் பார்க்க

சேதமடைந்த சாலை: வாகன ஓட்டிகள் அவதி

சிங்காநல்லூரில் சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். கோவை - திருச்சி சாலையில் ஏராளமான கனரக, இலகுரக மற்றும் இருசக்கர வாகனங்கள் தினசரி சென்று வருகின்றன. இப்பகுதியில் கடந்த... மேலும் பார்க்க

நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடா்மழை: சிறுவாணி நீா்மட்டம் 39 அடியாக உயா்வு

சிறுவாணி நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையால் அணையின் நீா்மட்டம் 39 அடியாக உயா்ந்துள்ளது. கோவை மாநகராட்சியின் 26 வாா்டுகள் மற்றும் நகரையொட்டிய 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பிர... மேலும் பார்க்க