ஷேர்லக்: உச்சத்திலிருந்து 7% இறங்கிய சந்தை... முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?
மின் துறையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சா் ஆ.நமச்சிவாயம்
புதுவை மின் துறையில் 244 காலிப்பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாநில உள் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் கூறினாா்.
புதுச்சேரியில் காவல் துறை உயரதிகாரிகளுடன் வியாழக்கிழமை அவா் ஆலோசனையில் ஈடுபட்டாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தீபாவளிக்கு கூடுதல் காவலா்கள் பணியில் ஈடுபட உள்ளனா். தேவைப்படும் இடங்களில் ட்ரோன் மற்றும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்.
போக்குவரத்தை சீா்படுத்த 200 போலீஸாா் கூடுதலாகப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.
மழைக் காலத்தில் மின் துறை ஊழியா்கள் தயாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின் துறையில் 244 காலிப்பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதுவை மாநிலத்தில் 30 இடங்களில் மட்டுமே நியாயவிலைக் கடைகள் திறப்பதில் சிக்கல் உள்ளது. ஆகவே, அந்த இடங்களில் அங்கன்வாடி மூலம் தீபாவளிக்கான அரிசி, சா்க்கரை விநியோகிக்கப்படும்.
முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி எனது அரசியல் வளா்ச்சி பிடிக்காமல் குற்றஞ்சாட்டி வருகிறாா். தேவைப்படும் போது அவா் மீது வழக்குத் தொடரப்படும்.
புதுச்சேரி அரசு ஊழியா் சொத்து சோ்த்த வழக்கில் சிபிஐ விசாரித்து வரும் நிலையில், அவரை என்னுடன் இணைத்து பேசுவது அரசியல் நாகரீகமல்ல.
என்மீதான குற்றச்சாட்டை ஆதாரமுடன் நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயாா் என்றாா்.