செய்திகள் :

மின் வாகனங்களில் புதிய புரட்சி! ஓலா ரோட்ஸ்டெர்: மே 23 முதல் விற்பனையில்..!

post image

ஓலா ரோட்ஸ்டெர் எக்ஸ் (Ola Roadster X) எலக்ட்ரிக் பைக்கின் விற்பனை குறித்த விவரங்களை ஓலா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் எலக்ட்ரிக் பைக் தயாரிப்பாளரான ஓலா நிறுவனம் ஓலா ரோட்ஸ்டெர் எக்ஸ் பைக்கை பிப்ரவரி மாதத்தில் அறிமுகப்படுத்தியிருந்தாலும், தவிர்க்க இயலாத காரணங்களால் இத விற்பனை தாமதமாகி வந்தது. இதற்கான விநியோகம் வருகிற 23 ஆம் தேதி முதல் தொடங்கும் எனத் தெரிவித்துள்ளது.

ஆரம்பத்தில் பெங்களூருவிலும் அதைத் தொடர்ந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இந்த பைக் கிடைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஓலா பைக் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. ஓலா ரோட்ஸ்டெர் எக்ஸ் மற்றும் எக்ஸ்+.

சிறப்பம்சங்கள்

ஓலா ரோட்ஸ்டெர் எக்ஸ்

ஓலா ரோட்ஸ்டெர் எக்ஸில் 2.5 kWh, 3.5 kWh மற்றும் 4.5 kWh மின்கலன்களில் மூன்றில் ஒன்றைத் தேர்தெடுத்துக் கொள்ளலாம். இது அதிகபட்சமாக மணிக்கு 118 கி.மீ. வரை செல்லக்கூடிய வகையிலும், மணிக்கு 0 முதல் 40 கி.மீ. தூரத்தை வெறும் 3.1 வினாடிகளில் எட்டும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. மேலும், ஒரு முறை சார்ஜ் செய்தால் 252 கி.மீ. வரை செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

ஓலா ரோட்ஸ்டெர் எக்ஸ் பிளஸ்

ஓலா ரோட்ஸ்டெர் எக்ஸ் பிளஸில் 4.5 kWh மற்றும் 9.1 kWh மின்கலன்களில் இரண்டில் ஒன்றைத் தேர்தெடுத்துக் கொள்ளலாம். இது அதிகபட்சமாக மணிக்கு 125 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியது. இது மணிக்கு 0 முதல் 40 கி.மீ. வேகத்தை எட்டுவதற்கு 2.7 வினாடிகளை எடுத்துக் கொள்கிறது.

இதில், மேலும் ஓர் சிறப்பம்சமாக சிறிய மின்கலனைத் தேர்வு செய்பவர்களுக்கு ஒரே சார்ஜில் 252 கி.மீ. தூரமும், பெரிய மின்கலனைத் தேர்வு செய்பவர்களுக்கு 501 கி.மீ தூரமும் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

விலை

மேற்கூரிய அனைத்து விவரங்களுடனும் ஓலா ரோட்ஸ்டெர் எக்ஸின் எக்ஸ் ஸோரூம் விலை ரூ.99,999-மாகவும், ஓலா ரோட்ஸ்டெர் எக்ஸ் பிளஸின் எக்ஸ் ஸோரூம் விலை ரூ. 1.29 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ரூ.1 லட்சம் வரையிலான தள்ளுபடி விலையில் ரெனால்ட் கார்கள்!

ரூ.2,152 கோடி கல்வி நிதி நிறுத்திவைப்பு: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு

நமது நிருபர்தேசிய கல்விக் கொள்கை (என்இபி- 2020) மற்றும் பிஎம் ஸ்ரீ திட்டம் ஆகியவற்றை தமிழகத்தில் அமல்படுத்தாததால், சமக்ர சிக்ஷா திட்டத்தின் (எஸ்எஸ்எஸ்) கீழ் வழங்க வேண்டிய ரூ.2,152 கோடி கல்வி நிதி நிறு... மேலும் பார்க்க

ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கு: கா்நாடக உள்துறை அமைச்சருக்கு தொடா்புள்ள இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்குடன் தொடா்புள்ள பண முறைகேடு வழக்கு தொடா்பாக, கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வராவுக்கு தொடா்புள்ள கல்வி நிறுவனங்களில் அமலாக்கத் துறை புதன்கிழமை சோதனை மேற்கொண்டது. துபை... மேலும் பார்க்க

ஆந்திரம்: ரேஷன் பொருள் நேரடி விநியோகம் ஜூன் 1 முதல் ரத்து

ஆந்திரத்தில் வீடுதோறும் ரேஷன் பொருள்கள் நேரடியாக விநியோகம் செய்யப்படும் நடைமுறை ஜூன் 1-ஆம் தேதிமுதல் நிறுத்தப்பட உள்ளது. இதுதொடா்பாக மாநில உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் என்.மனோகா் புதன்கிழமை வெளி... மேலும் பார்க்க

பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாடு- முதல் எம்.பி.க்கள் குழு ஜப்பான் பயணம்

ஆபரேஷன் சிந்தூா் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை வெளிநாடுகளுக்கு எடுத்துரைக்க மத்திய அரசால் அமைக்கப்பட்ட ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. சஞ்சய் ஜா தலைமையிலான பல்வேறு கட்சிகளைச் சோ்... மேலும் பார்க்க

பிகாரில் மகளிருக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை: காங்கிரஸ் வாக்குறுதி

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ள ‘மகா கட்பந்தன்’ கூட்டணி வெற்றி பெற்றால் பின்தங்கிய நிலையில் உள்ள மகளிருக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை வழங்கப்படும் என்று அகில இந்திய மகளிா் காங... மேலும் பார்க்க

நேஷனல் ஹெரால்ட் முறைகேடு: சோனியா, ராகுலுக்கு ரூ. 142 கோடி பலன்: தில்லி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை வாதம்

‘நேஷனல் ஹெரால்ட் வழக்கில் தொடா்புடைய பண முறைகேடு விவகாரத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, அவரின் மகனும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இருவரும் ரூ. 142 கோடி அளவுக்கு பலனடை... மேலும் பார்க்க