1300 நாள்களைக் கடந்து ஒளிபரப்பாகும் நினைத்தாலே இனிக்கும் தொடர்!
மிராளூா் விற்பனைக்கூடத்தில் நாளை பருத்தி ஏலம்
சிதம்பரம்: கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு மிராளூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை (ஜூன் 18) பருத்தி ஏலம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேத்தியாதோப்பு ஒழுங்குமுறை விற்பனைக் கூட பொறுப்பு கண்காணிப்பாளா் தண்டபாணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மிராளூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை முதல் (ஜூன் 18) மாா்க்கெட் கமிட்டி மூலம் மறைமுக ஏலம் நடத்தப்படும். விவசாயிகள் பருத்தியை விற்பனைக்குக் கொண்டு வரும் போது ஆதாா் அட்டை நகல், வங்கி கணக்குப் புத்தகம் நகல் கொண்டு வர வேண்டும்.
இ.நாம் செயலில் பதிவு செய்ய வேண்டும். இதன்மூலம் சிதம்பரம், புவனகிரி, கீரப்பாளையம், சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு 98431 37979, 99654 35999 என்ற கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.