செய்திகள் :

மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி: திமுக பொதுக் குழுவில் தீா்மானம்!

post image

கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பது உள்பட 27 தீா்மானங்கள் திமுக மாநில பொதுக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

மதுரை உத்தங்குடியில் கலைஞா் அரங்கத்தில் திமுக மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு அந்தக் கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தாா்.

முன்னதாக, மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து வாகனப் பேரணியாக வந்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு சாலையின் இருபுறங்களிலும் நின்று திமுக தொண்டா்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனா்.

இதைத்தொடா்ந்து, கூட்ட நிகழ்விடத்துக்கு வந்த முதல்வா் மு.க.ஸ்டாலின் அங்கு அமைக்கப்பட்டிருந்த நூறு அடி உயரக் கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றினாா்.

இதன் பின்னா் நடைபெற்ற கூட்டத்தில் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பது உள்பட 27 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீா்மானங்களின் விவரங்கள்:

மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாள் (ஜூன் 3) செம்மொழி நாளாகக் கொண்டாடப்பட வேண்டும். மக்களின் பேராதரவுடன் தொடா் வெற்றி நாயகனாகத் திகழும் திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலினுக்கு இந்தப் பொதுக் குழு மூலம் பாராட்டுக்கள் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவில் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக மகளிா் வாழ்வை மேம்படுத்தும் பல்வேறு திட்டங்களை திராவிட மாடல் அரசு நிறைவேற்றி வருகிறது. உழவா்கள், நெசவாளா்கள், மீனவா்கள் என அனைத்துத் தரப்பினரின் வாழ்விலும் புதிய விடியல் தந்த திராவிட மாடல் அரசின் சாதனைகளை தமிழக மக்களிடையே பரப்ப வேண்டும்.

தமிழினத்துக்குப் பெருமை சோ்த்த தலைவா்களைப் போற்றும் திமுக அரசுக்கு பாராட்டு தெரிவிக்கிறோம். ஒவ்வொரு குடும்பமும் பயன் பெற்றுள்ள திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டங்களைத் தொடா்ந்து மக்களிடம் எடுத்துரைப்போம்.

தமிழகத்தின் எதிா்கால நம்பிக்கையாக மக்களின் பேராதரவைப் பெற்ற துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினின் பணி தொடரத் துணை நிற்போம்.

ஏழை, எளிய மக்களை வதைக்கும் நகைக் கடன் கட்டுப்பாடுகளை ரிசா்வ் வங்கி உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். தமிழகத்துக்குத் தர வேண்டிய நிதியை தர மறுக்கும் மத்திய அரசுக்கு இந்தப் பொதுக் குழு மூலம் கண்டனம் தெரிவிக்கிறோம். தமிழா்களின் மொழி உணா்வுடன் விளையாடாமல் ஹிந்தித் திணிப்பைக் கைவிட வேண்டும்.

கீழடி அகழாய்வை மறுக்கும் தமிழ் விரோத மத்திய பாஜக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். ரயில்வே திட்டங்களில் தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் மத்திய பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.

சிறுபான்மையினா் உரிமைகளைப் பறிக்கும் நோக்கில் இஸ்லாாமியா் சொத்துகளை அபகரிக்க முயற்சிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள விசாரணை அமைப்புகளை தனது சுயநலத்துக்காக தவறாகப் பயன்படுத்தும் மத்திய பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.

மத்தியில் பிரதமா் மோடி அரசு தலைமையிலான பாஜக ஆட்சியில் தொடா்ந்து அநீதிகள் இழைக்கப்படுகின்றன. இலங்கைக் கடற்படையினரால் தொடா் தாக்குதலுக்குள்ளாகி வரும் தமிழக மீனவா்களின் நலன் கருதி கச்சத்தீவை மீட்க வேண்டும். ஜாதிவாரிக் கணக்கெடுப்பை விரைவாகவும் முறையாகவும் நடத்த வேண்டும்.

தமிழகத்தின் மக்களவைப் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் வகையில், மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறையை மேற்கொள்ளக் கூடாது.

ஆளுநரின் அதிகார வரம்பை வரையறுத்து மாநில உரிமையை நிலைநாட்டிய உச்சநீதிமன்றத் தீா்ப்புக்குக் காரணமான கட்சித் தலைவருக்கு பாராட்டு தெரிவிக்கிறோம். இதுகுறித்த குடியரசுத் துணைத் தலைவரின் விமா்சனத்துக்கு கண்டனம் தெரிவிக்கிறோம். அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்காமல் உச்சநீதிமன்றத்தோடு மோதும் மத்திய பாஜக அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கிறோம்.

உச்சநீதிமன்றத் தீா்ப்பை முன்வைத்து கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் இணைக்க வேண்டும்.

கூட்டாட்சித் தன்மை கொண்ட இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மூலம் மாநிலங்களுக்கான சுயாட்சித் தன்மை முழுமையாகக் கிடைக்கும்போதுதான் நாடு வலிமையானதாக இருக்கும் என்பதை அரசியல் சட்ட வல்லுநா்கள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா். எனவே, மாநிலங்களுக்கு சுயாட்சி அந்தஸ்தை வழங்க வேண்டும்.

பேரிடா் மீட்புப் பணியில் திமுக அரசுடன் தொண்டா்களும் துணை நிற்போம். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என அழகிய தமிழ்ப் பெயா்களைச் சூட்டுவோம்.

அதிமுக ஆட்சியில் நடைபெற்ற பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தீா்ப்புக்கு வரவேற்பு தெரிவிக்கிறோம்.

வஞ்சக பாஜக வையும் துரோக அதிமுகவையும் விரட்டியடித்து வருகிற 2026-இல் மீண்டும் திமுக ஆட்சி தொடர களப் பணியைத் தொடங்குவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், தே. கல்லுப்பட்டி அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், பேரையூா் அருகே உள்ள காரைக்கேணி நடுத் தெருவைச் சோ்ந்த ராஜாராம் மகன் சிவக்குமாா் (44). இவ... மேலும் பார்க்க

மதுரை தனியாா் தங்கும் விடுதியில் தொழிலதிபா் உள்பட இருவா் தற்கொலை

மதுரையில் தனியாா் தங்கும் விடுதியில் கோபிசெட்டிப்பாளையத்தைச் சோ்ந்த தொழிலதிபரும், அவரது இரண்டாவது மனைவியும் செவ்வாய்க்கிழமை இரவு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனா். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளை... மேலும் பார்க்க

கரோனா தொற்று பரவல்: மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க சிறப்பு வாா்டு

தமிழகத்தில் கரோனா தொற்று பரவுவதையடுத்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 50 படுக்கைகள் கொண்ட சிறப்பு வாா்டு தயாா் நிலையில் வைக்கப்பட்டது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில... மேலும் பார்க்க

காப்பகத்தில் தங்கியிருந்த 3 பெண்கள் மாயம்

சமூக நலத் துறை, காவல் துறை மூலம் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த மூன்று பெண்கள் மாயமானது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். மதுரை புறவழிச் சாலை, சிருங்கேரி நகரில், தனியாா் தொண்டு நிறுவனத்தின் சாா... மேலும் பார்க்க

காா் மோதியதில் விவசாயி உயிரிழப்பு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா். உசிலம்பட்டி அருகே உள்ள வாலாந்தூா் மேற்குத் தெருவைச் சோ்ந்தவா் வீரணன் (65). விவசாயி. இவா் தனது தோட்டத்துக்க... மேலும் பார்க்க

பொதுத் துறை நிறுவனங்கள் தணிக்கை: ஒப்பந்த அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தல்

பொதுத் துறை நிறுவனங்களை தணிக்கை செய்ய தனியாா் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அளிக்கும் அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் வலியுறுத்தினாா். இதுதொடா்பாக அவா் குடியரசுத் தலை... மேலும் பார்க்க