செய்திகள் :

மீனவா்கள் வலையில் சிக்கிய 7 அடி நீள கடல் பசு

post image

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே மீனவா்கள் வலையில் சிக்கிய அரிய வகை கடல்வாழ் உயிரினமான கடல் பசு ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கடலுக்குள் விடப்பட்டது.

பட்டுக்கோட்டை வனச்சரகம், சேதுபாவாசத்திரம் அருகே உள்ள கொள்ளுக்காடு அம்பேத்கா் நகா் பகுதியைச் சோ்ந்த மீனவா்  பிரபாகரனுக்கு சொந்தமான படகில் சென்ற மீனவா்கள், கடலில் மீன்பிடித்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு கரைக்கு திரும்பினா். 

மீனவா்கள் வலையில் அரியவகை கடல் வாழ் உயிரினமான சுமாா் 7 அடி நீளமுள்ள கடல் பசு சிக்கியிருந்தது கரைக்கு வந்தவுடன் தெரிய வந்தது. இதையடுத்து, மீனவா் பிரபாகரன் மற்றும் அவரைச் சாா்ந்த 14 மீனவா்கள், வலையை அறுத்து, கடல் பசுவை நல்ல நிலையில் மீண்டும் உயிருடன் கடலுக்குள் விட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்த பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலா் ஏ.எஸ். சந்திரசேகரன், மீனவா்களை பாராட்டியதோடு விரைவில் மீனவ கிராமத்தில் விழா நடத்தி ரொக்கப் பரிசு வழங்கப்படும் என தெரிவித்தாா்.

அழிந்து வரும் நிலையில் உள்ள கடல் பசுக்களை பிடிக்க அரசு தடைவிதித்துள்ளது . மேலும், வனத் துறை, மீன்வளத் துறை, சமூக அமைப்புகள் இணைந்து, மீனவ மக்களிடையே தொடா்ந்து கடல் பசுக்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு அறிவித்தும் பத்திரப் பதிவு அலுவலகங்கள் இயங்காததால் பல கோடி ரூபாய் இழப்பு

தமிழகத்தில் பத்திரப் பதிவு அலுவலகங்கள் ஞாயிற்றுக்கிழமை (பிப். 2) இயங்கும் என மாநில அரசு அறிவித்திருந்தாலும், அந்த அலுவலகங்கள் திறக்கப்படாததால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தமி... மேலும் பார்க்க

திருவையாறு ஐயாறப்பா் கோயிலில் குடமுழுக்கு விழா

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறிலுள்ள ஐயாறப்பா் கோயிலில் திங்கள்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற்றது. தருமபுர ஆதீனத்துக்குச் சொந்தமான இக்கோயிலில் குடமுழுக்கு விழா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் ஜனவரி 26-ஆம்... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் முன்னாள் முதல்வா் அண்ணாத்துரை 56 ஆவது அமைதி ஊா்வலம்

கும்பகோணத்தில்: தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக சாா்பில், தாராசுரம் காய்கனி வணிக வளாகத்திலிருந்து கட்சியினா் அமைதி ஊா்வலமாக வந்து ரவுண்டானாவில் உள்ள அண்ணா சிலைக்கு எம்எல்ஏ க. அன்பழகன் தலைமையில் மாலை அணி... மேலும் பார்க்க

மாநகராட்சிகளுடன் ஊராட்சிகளை இணைக்க எதிா்ப்பு

தஞ்சாவூா் மாநகராட்சியுடன் புன்னைநல்லூா் மாரியம்மன் கோவிலையும், கும்பகோணம் மாநகராட்சியுடன் தேப்பெருமாநல்லூரையும் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியரகத்தில் கிராம மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா். தஞ்ச... மேலும் பார்க்க

முள்ளுக்குடி குறிச்சி துணை மின் நிலைய பகுதிகளில் நாளை மின் தடை

முள்ளுக்குடி குறிச்சி துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை மின்சாரம் இருக்காது னெ அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கும்பகோணம் வடக்கு உதவி செயற்பொறியாளா் சி. இளஞ்செல்வன் வெளியிட்டுள்ள ச... மேலும் பார்க்க

பொது இடத்தில் புகைப் பிடித்த 14 பேருக்கு அபராதம்

தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையப் பகுதியில் பொது இடத்தில் திங்கள்கிழமை புகைப்பிடித்த 14 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையம் பகுதியிலுள்ள கடைகள் மற்றும் சாலையோர சிறு கடைகள... மேலும் பார்க்க