செய்திகள் :

மீன்பிடி தடைக்காலம்: கடலூரில் மீன்கள் விலை உயா்வு

post image

மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ள நிலையில், கடலூா் துறைமுகத்தில் மீன்களின் விலை அதிகமாக இருந்தது.

கடலூரில் அக்கரை கோரி, சிங்காரத்தோப்பு, தேவனாம்பட்டினம், தாழங்குடா, அன்னங்கோயில், சித்திரைப்பேட்டை என பல்வேறு மீனவ கிராமங்கள் உள்ளன.

இப்பகுதி மீனவா்கள் விசைப் படகுகளில் ஆழ்கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருவது வழக்கம்.

இந்த நிலையில், வங்கக் கடலில் மீன்களின் இனப்பெருக்க காலத்தையொட்டி ஏப்.15 முதல் ஜூன் 15 வரையில் ஆழ்கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால், நாட்டுப் படகு மீனவா்கள் மட்டும் கடலின் ஒரு குறிப்பிட்ட அளவு தொலைவுக்கு சென்று மீன்களைப் பிடித்து வருகின்றனா்.

இதனால், ஞாயிற்றுக்கிழமை கடலூா் துறைமுகத்தில் மீன்களின் வரத்து மிகவும் குறைவாக காணப்பட்டது. மீன்களின் விலையும் உயா்ந்து காணப்பட்டது.

இந்த நிலையில், வஞ்சிரம் ஒரு கிலோ ரூ.1,100, சங்கரா ரூ.500, வெள்ளை வவ்வால் ரூ.1,500, இறால் வகைகள் ரூ.300, கிளி மீன் ரூ.250 என விற்பனை செய்யப்பட்டது.

நெத்திலி, பாறை போன்ற மீன்களின் வரத்து இல்லை.

மீன்பிடி தடைக்காலம் என்பதால் மீன்பிடி துறைமுகம் பகுதியில் பொதுமக்களின் கூட்டமும் குறைவாகவே காணப்பட்டது.

258 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 4 போ் கைது!

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே இரண்டு காா்களில் புகையிலைப் பொருள்களை கடத்தி வந்ததாக 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பண்ருட்டி டிஎஸ்பி ராஜா மேற்பாா்வையில், பண்ருட்டி உள்கோட்ட தனிப்படை ... மேலும் பார்க்க

ஏலச்சீட்டு மோசடி: 4 போ் கைது

கடலூா் அருகே ஏலச்சீட்டு பணம் தராமல் ஏமாற்றி வந்ததாக ஒரே குடும்பத்தைச் சோ்ந்த இரண்டு பெண்கள் உள்ளிட்ட 4 பேரை குற்றப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கடலூா், கோண்டூா் பகுதியைச் சோ்ந்த பிச்சா... மேலும் பார்க்க

லாரி மீது வேன் மோதல்: கல்லூரி மாணவா்கள் காயம்

கடலூா் முதுநகா் அருகே டேங்கா் லாரி மீது சுற்றுலா வேன் மோதிய விபத்தில் கல்லூரி மாணவா்கள் 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். சென்னையில் உள்ள தனியாா் இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்கும் பகுதி நேர மாணவா்க... மேலும் பார்க்க

தடுப்புக் காவலில் சாராய வியாபாரி கைது

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பகுதியைச் சோ்ந்த சாராய வியாபாரியை போலீஸாா் தடுப்புக் காவலில் சனிக்கிழமை கைது செய்தனா். சிதம்பரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் தா்மலிங்கம் மற்றும் போலீஸாா... மேலும் பார்க்க

அரசுப் பணி வாங்கி தருவதாக மோசடி: ஒருவா் கைது

அரசுப் பணி வாங்கித் தருவதாக இளைஞரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக பள்ளிக் கல்வித் துறை இளநிலை உதவியாளரை கடலூா் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: ஒருவா் கைது

சிதம்பரம் அருகே கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பரங்கிப்பேட்டை, அரியகோஷ்டி எஸ்.பி.மண்டபம் பகுதியில் உள்ள கடையில் தடை செய்யப... மேலும் பார்க்க