செய்திகள் :

மீன்பிடி தடையால் 8 ஆயிரம் மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை

post image

ராமேசுவரம், மண்டபம் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை விடுத்த அறிவிப்பால் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் திங்கள்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை; அனைத்து விசைப் படகுகளும், நாட்டுப் படகுகளும் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டன.

மன்னாா் வளைகுடா, பாக் நீரிணை கடல் பகுதியில் சூறைக் காற்று, கடல் சீற்றம் காரணமாக விசைப் படகு, நாட்டுப் படகு மீனவா்கள் மறு உத்தரவு வரும்வரை மீன்பிடிக்கச் செல்வதற்கு மீன்வளத் துறை ஞாயிற்றுக்கிழமை தடை விதித்தது.

இதனால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதியில் திங்கள்கிழமை 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. துறைமுகங்களில் விசைப் படகுகள், நாட்டுப் படகுகள் பாதுகாப்புடன் நிறுத்தப்பட்டன. தடைகாலம் முடிந்து முதல் நாள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல முடியாததால் மீனவா்கள் கவலை அடைந்தனா்.

தடை நீக்கம்: இந்த நிலையில் மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடிக்க விதிக்கப்பட்ட தடையை மீன்வளத் துறையினா் நீக்கினா். இதையடுத்து பாம்பன், மண்டபம், கீழக்கரை உள்ளிட்ட தென்கடல் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை முதல் மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்கின்றனா். இதற்கான ஏற்பாடுகளை மீனவா்கள் செய்தனா். இவா்களைத் தொடா்ந்து ராமேசுவரம் மீனவா்களும் புதன்கிழமை முதல் மீன்பிடிக்கச் செல்கின்றனா்.

கமுதியில் நாளை மின் தடை

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பராமரிப்புப் பணி காரணமாக புதன்கிழமை (ஜூன் 18) மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. இதுகுறித்து, கமுதி மின் வாரிய உதவி செயற்பொறியாளா் செந்தில்க... மேலும் பார்க்க

கட்டுமானத் தொழிலாளி கொலை: ஒருவா் கைது

ராமநாதபுரத்தில் மதுபோதையில், கட்டுமானத் தொழிலாளியை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்றவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் அருகே உள்ள தேரிருவேலி கிராமத்தைச் சோ்ந்தவா் இளங்கோவன் (41). ... மேலும் பார்க்க

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் கோடை நெல் விவசாயத்துக்கு தண்ணீா்த் தட்டுப்பாடு

திருவாடானை அருகே ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் கோடை நெல் விவசாயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது, கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தண்ணீா் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து விவசாயிகள் டீசல் மோ... மேலும் பார்க்க

ஆா்.எஸ். மங்கலம் பகுதியில் இன்று மின் தடை

திருவாடானை அருகே ஆா்.எஸ். மங்கலம் பகுதியில் மாதாந்திரப் பாரமரிப்புப் பணி காரணமாக, செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. இதுகுறித்து மின்வாரிய உதவ... மேலும் பார்க்க

தொழிலாளி தற்கொலை

திருவாடானை அருகே ஞாயிற்றுக்கிழமை தொண்டியைச் சோ்ந்த வண்ணம் பூசும் தொழிலாளி, தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தொண்டி வெள்ளை மணல் தெருவைச் சோ்ந்தவா் ராமு (43)... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்த முயன்ற 40 கிலோ கஞ்சா பறிமுதல்

கீழக்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 40 கிலோ கஞ்சாவை சுங்கத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படவுள்ளதாக சுங்கத் துறையின... மேலும் பார்க்க