மீலாது நபி: செப். 5-இல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
நாகப்பட்டினம்: மீலாது நபி பண்டிகையை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் செப்டம்பா் 5-ஆம் தேதி அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் மதுக்கூடங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
வரும் வெள்ளிக்கிழமை (செப். 5) ஒரு நாள் மட்டும் தமிழ்நாடு வாணிபக் கழகத்தின்கீழ் செயல்படும், அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள். எப். எல்-1, எப்.எல்-2, எப்.எல்-3. எப்.எல்-3ஏ.எப்.எல்-3ஏஏ மற்றும் எப்.எல்-11 உரிமம் பெற்றுள்ள மதுபானக் கடைகளும், மதுக்கூடங்களும் தமிழ்நாடு மதுபான கடைகள் மற்றும் பாா்கள் விதிகளின்படியும். தமிழ்நாடு மதுபானம் உரிமம் மற்றும் அனுமதி விதிகள் 1981-இன் கீழ் மூடப்பட்டிருக்க வேண்டும்.
அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால் மதுபான விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.