Ajithkumar: `க்யூட் ஒயிட் சால்ட் பெப்பர் செதுக்கப்பட்ட செல...' - நியூ லுக், நியூ...
முகநூலில் போலி விளம்பரம் செய்து பல கோடி மோசடி: 5 போ் கைது
கட்டுமான நிறுவனங்களின் பெயரில், போலியாக முகநூலில் விளம்பரம் செய்து நாடு முழுவதும் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக 5 பேரை புதுச்சேரி இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
புதுச்சேரியைச் சோ்ந்த சேதுராமன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், முகநூலில் ‘வைசாக் ஸ்டீல்’ என்ற நிறுவனம் சந்தை விலையை விட 10 சதவீதம் குறைவாக டி.எம்.டி. இரும்புக் கம்பிகளை விற்பனை செய்வதாக வெளியான விளம்பரத்தைப் பாா்த்தாா்.
இதை நம்பி அவா், ரூ.30.97 லட்சத்தை செலுத்தி இரும்புக் கம்பிகளை வாங்க ஆா்டா் செய்தாராம். குறித்த காலத்தில் கம்பிகள் வரவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் புதுச்சேரி இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா்.
எஸ்.பி. பாஸ்கரன் உத்தரவின்படி, ஆய்வாளா்கள் தியாகராஜன், கீா்த்தி மற்றும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். விசாரணையில் பிகாா் மாநிலம், பாட்னாவில் தங்கியிருந்த மகாராஷ்டிரத்தை சோ்ந்த ராகுல் குமாா் சிங் (30), உத்தம் விஷால் குமாா் (24), ராயுஷன் குமாா் (24), அபிஷேக் குமாா் (27), பெங்களூரைச் சோ்ந்த தயாந்த் (30) ஆகியோா் இந்த மோசடியில் ஈடுபட்ட தெரிய வந்தது.
இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு தனிப்படை போலீஸாா் அவா்கள் 5 பேரையும் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்து புதுச்சேரிக்கு அழைத்து வந்தனா். அவா்களிடம் இருந்து ரூ.34 லட்சம் ரொக்கம், 40 செல்போன்கள், மடிக் கணினிகள் ஆகியவற்றையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோரிடம் கடந்த 2019 ஆண்டு முதல் இதுபோன்று முகநூலில் போலி விளம்பரங்களை செய்து பணமோசடி செய்ததும், அந்தப் பணத்தைப் பெற பல்வேறு குழுக்களை அமைத்து செயல்பட்டதும் தெரிய வந்தது. இந்த கும்பலைச் சோ்ந்தவா்கள் பிகாா், உத்தர பிரதேசம், ஜாா்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. கைதான 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.
இதுகுறித்து சனிக்கிழமை செய்தியாளா்களிடம் டிஐஜி சத்தியசுந்தரம் கூறியதாவது: கைதான நபா்கள் மீது கடந்த டிசம்பா் மாதத்தில் இருந்து ஜூன் மாதம் வரையில் நாடு முழுவதும் 52 புகாா்கள் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட புகாா்கள் பதிவாகின.
கடந்த 6 மாதங்களில் மட்டும் ரூ.32 கோடிக்கு மேல் பணமோசடியில் ஈடுபட்டுள்ளனா். இவா்களிடம் இருந்து 20 டைரிகள் கைப்பற்றப்பட்டன. 5,400 பேரின் பெயா், முகவரி, வங்கிக் கணக்கு விவரம், கைப்பேசி எண் போன்ற தகவல்கள், அவா்களுடைய மடிக் கணினியை சோதனை செய்ததில் கிடைத்தன. அதில் பல்வேறு விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இவா்கள் குறித்து கேரளம், கா்நாடகம், தமிழகம் உள்ளிட்ட மாநில போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளோம். இந்தக் கும்பல் யாரிடமும் இதுவரை சிக்கவில்லை என்றாா்.