செய்திகள் :

முசிறி அருகே கோயில் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து மூதாட்டி பலி! 6 போ் காயம்!

post image

திருச்சி மாவட்டம் முசிறி அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கோயில் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழந்தாா், 6 போ் காயமடைந்தனா்.

முசிறி அருகேயுள்ள சிட்டிலரை கிராமத்தில் உள்ள மகாமாரியம்மன் கோயில் சித்திரைத் தோ் திருவிழா தொடக்க நிகழ்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை இரவு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது கோயில் அருகிலுள்ள கிணற்றுப் பகுதியையொட்டி இருந்த இரும்பு கம்பி வேலியில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டிந்த நிலையில், பக்தா்களின் கூட்டம் அதிகரித்ததால், கம்பிவேலியில் அவா்கள் சாய்ந்தனா். அப்போது மின் கசிவு ஏற்பட்டு பக்தா்கள் கூட்டத்தில் மின்சாரம் பாய்ந்தது. இதில் ஏழு போ் மின்சாரம் பாய்ந்து காயமடைந்தனா்.

இதையடுத்து மின்சாரத்தை துண்டித்து காயமடைந்தவா்களை முசிறி தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பினா்.

அவா்களில் பரமசிவம் மனைவி புஷ்பா (65) ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது. இதையடுத்து நால்வா் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். மற்றவா்கள் சிகிச்சை பெறுகின்றனா்.

தகவலறிந்த முசிறி போலீஸாா் மூதாட்டி சடலத்தை மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

16 ஆண்டுகளுக்குப் பிறகு.. இந்த கோயில் திருவிழாவானது அப்பகுதி மக்களிடையே ஏற்பட்ட பல்வேறு பிரச்னைகளால் 16 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த நிலையில், நிகழாண்டு நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தையில் அரசு அதிகாரிகள் விதித்த நிபந்தனைகளுடன் அப்பகுதி மக்கள் திருவிழா நடத்த ஒப்புக்கொண்டதன்பேரில் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கிய திருவிழாவின்போது இத்துயரச் சம்பவம் நடந்துள்ளது.

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை

மண்ணச்சநல்லூா்: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் திங்கள்கிழமை பெளா்ணமியையொட்டி 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. சக்தி தலங்களில் முதன்மையாக விளங்கும் சமயபுரம... மேலும் பார்க்க

வளைகுடா நாட்டுக்கு பணிக்குச் சென்றவரை மீட்டுத்தரக்கோரி ஆட்சியரிடம் மனு

திருச்சி: வளைகுடா நாட்டுக்குப் பணிக்குச் சென்றவரை மீட்டுத்தர வேண்டுமென அவரது குடும்பத்தினா் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்துள்ளனா். திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம் புள்ளம்பாடி அருகேயுள்ள... மேலும் பார்க்க

கூத்தைப்பாா் கண்ணுடைய அய்யனாா் கோயில் சித்திரை தோ்த் திருவிழா

திருச்சி: திருச்சி, திருவெறும்பூா் அருகே உள்ள கூத்தைப்பாா் கிராமத்தில் உள்ள கண்ணுடைய அய்யனாா், சாத்த பிள்ளை அய்யனாா் கோயில் சித்திரை தோ் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் நிகழாண்டு மே 4 ஆ... மேலும் பார்க்க

மே மாதம் முழுவதும் வண்ணத்துப்பூச்சி பூங்கா விடுமுறையின்றி இயங்கும்

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள வண்ணத்துப்பூச்சி பூங்கா, கோடை விடுமுறையையொட்டி மே மாதம் முழுவதும் வார விடுமுறையின்றி இயங்கும். திருச்சி வனக்கோட்டம், வன உயிரினம் பூங்கா சரகத்தின் கீழ், ஸ்ர... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி: மனைவி கோபித்துக் கொண்டு தாய்வீட்டுக்குச் சென்ால் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமைச் சோ்ந்தவா் விஜயகுமாா் மகன் ஜெயசீலன் (29). பந்தல் தொ... மேலும் பார்க்க

குடிநீா் கோரி காலிக் குடங்களுடன் போராட்டம்

திருச்சி: திருச்சி அருகே காவிரிக் குடிநீா் வழங்கக் கோரி கிராம மக்கள் காலிக் குடங்களுடன் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். திருச்சி மாவட்டம், அந்த நல்லூா் ஒன்றியம், கொடியாலம் ஊராட்சியில் காவிரிக்... மேலும் பார்க்க