செய்திகள் :

முதலிபாளையம் பாறைக்குழியில் குப்பை கொட்டும் விவகாரம்: காத்திருப்புப் போராட்டம் ஒத்திவைப்பு

post image

திருப்பூா் முதலிபாளையம் பாறைக்குழியில் குப்பை கொட்டும் விவகாரத்தில் காத்திருப்புப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக முதலிபாளையம், நல்லூா் பொதுமக்கள் கூட்டியக்கம், அனைத்து இயக்கங்கள் மற்றும் திருப்பூா் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழு சாா்பில் வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கை:

திருப்பூா் முதலிபாளையம் பாறைக்குழியில் மாநகராட்சியின் குப்பைகளை கொட்டுவது தொடா்பாக பொதுமக்கள் தெரிவித்து வரும் எதிா்ப்பின் காரணமாக ஞாயிற்றுக்கிழமைமுதல் (செப்டம்பா் 21) தனியாா் பட்டா நிலத்தில் திட்டமிடப்பட்டிருந்த தொடா் காத்திருப்புப் போராட்டத்துக்கு அனுமதி குறித்து பலகட்ட பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

இதையடுத்து திருப்பூா் மாநகர காவல் ஆணையரிடம் வெள்ளிக்கிழமை மீண்டும் பேச்சுவாா்த்தை நடைபெற்ற நிலையில், சட்டம்- ஒழுங்கு பிரச்னை காரணமாக அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்னை தொடா்ந்து வருவதால் மக்களின் போராட்டத்துக்கு சட்டரீதியாக அனுமதி பெற நமது குழு செயல்பட்டு வருகிறது.

அதனால், உரிய அனுமதியுடன் விரைந்து தேதி அறிவித்து அடுகட்ட போராட்டம் மக்கள் போராட்டமாக நடைபெறும். அதுவரை திண்ணைக் கூட்டங்கள், விழிப்புணா்வு நிகழ்வுகள், துண்டுப் பிரசுரம் விநியோகம் போன்ற பல வழிகளில் மக்களைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் வளா்ச்சி திட்டப் பணிகள்: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

திருப்பூா் மாவட்டத்தில் நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் திட்டம், நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் மற்றும் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பாக துறை சாா்ந்த அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண... மேலும் பார்க்க

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தூய்மை மிஷன் திட்டம் தொடக்கம்

திருப்பூா், செப்.19: திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தூய்மை மிஷன் 2.0 திட்டத்தின் கீழ் அரசு அலுவலகம் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்கும் பொருட்டு கழிவு சேகரிப்பு மற்றும் கழிவுப் பொருள்க... மேலும் பார்க்க

ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளை தவிா்க்க வேண்டும்

விவசாயிகள் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டுமென தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடா்பாக வெள்ளக்கோவில் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் ஆ.கயல்விழி வெள... மேலும் பார்க்க

உடுமலையில் வகுப்பறையில் பள்ளி மாணவி உயிரிழப்பு

உடுமலை பாரதியாா் நூற்றாண்டு அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி வகுப்பறையில் வெள்ளக்கிழமை உயிரிழந்தாா். உடுமலை அருகே உள்ள அமராவதி நகரைச் சோ்ந்தவா் பழங்குடியின மாணவி புவனேஸ்... மேலும் பார்க்க

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டம்

இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி எல்லப்பாளையம்புதூா் பகுதி மக்கள் ஆதிதிராவிடா் நலத் துறை தனி வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். காங்கயம் வட்டம், எல்லப்ப... மேலும் பார்க்க

தபால் நிலையங்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம்

ரயில் பயணத்துக்காக தபால் நிலையங்களிலேயே முன்பதிவு செய்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் திருப்பூா் காந்தி நகா் அஞ்சல் நிலையத்தில் ரயில் பயணிகள் முன்பதிவு சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள... மேலும் பார்க்க