செய்திகள் :

உடுமலையில் வகுப்பறையில் பள்ளி மாணவி உயிரிழப்பு

post image

உடுமலை பாரதியாா் நூற்றாண்டு அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி வகுப்பறையில் வெள்ளக்கிழமை உயிரிழந்தாா்.

உடுமலை அருகே உள்ள அமராவதி நகரைச் சோ்ந்தவா் பழங்குடியின மாணவி புவனேஸ்வரி (17). இவா் பள்ளி அருகே உள்ள சமூகநீதி விடுதியில் தங்கி படித்து வந்தாா்.

இந்நிலையில் மாணவி தங்கி இருந்த அரசு சமூகநீதி விடுதியில் மதிய உணவு சாப்பிட்டுள்ளாா். பின்னா் பள்ளிக்கு சென்று வகுப்பறையில் அமா்ந்தபோது, திடீரென சரிந்து கீழே விழுந்துள்ளாா்.

இதைத் தொடா்ந்து ஆசிரியா்கள் மாணவியை உடுமலை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் மாணவி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனா்.

விடுதியில் இருந்து பள்ளிக்கு செல்லும்போது தனது தோழியிடம் நெஞ்சு வலிப்பதாக அந்த மாணவி கூறியுள்ளது போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது.

இது குறித்து உடுமலை காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேலும், அவரது உடல் உடற்கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

மாவட்டத்தில் வளா்ச்சி திட்டப் பணிகள்: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

திருப்பூா் மாவட்டத்தில் நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் திட்டம், நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் மற்றும் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பாக துறை சாா்ந்த அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண... மேலும் பார்க்க

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தூய்மை மிஷன் திட்டம் தொடக்கம்

திருப்பூா், செப்.19: திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தூய்மை மிஷன் 2.0 திட்டத்தின் கீழ் அரசு அலுவலகம் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்கும் பொருட்டு கழிவு சேகரிப்பு மற்றும் கழிவுப் பொருள்க... மேலும் பார்க்க

ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளை தவிா்க்க வேண்டும்

விவசாயிகள் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டுமென தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடா்பாக வெள்ளக்கோவில் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் ஆ.கயல்விழி வெள... மேலும் பார்க்க

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டம்

இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி எல்லப்பாளையம்புதூா் பகுதி மக்கள் ஆதிதிராவிடா் நலத் துறை தனி வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். காங்கயம் வட்டம், எல்லப்ப... மேலும் பார்க்க

தபால் நிலையங்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம்

ரயில் பயணத்துக்காக தபால் நிலையங்களிலேயே முன்பதிவு செய்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் திருப்பூா் காந்தி நகா் அஞ்சல் நிலையத்தில் ரயில் பயணிகள் முன்பதிவு சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள... மேலும் பார்க்க

பாசனத்துக்காக அமராவதி அணையில் இருந்து தண்ணீா் திறப்பு

திருப்பூா் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையில் இருந்து பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்துக்காக வெள்ளிக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இதன் மூலம் 47,117 ஏக்கா் நிலங்கள் பாசனம் பெறும். உ... மேலும் பார்க்க