செய்திகள் :

முதல்வரிடம் அளித்த கோரிக்கை மனு: மேட்டூரில் அமைச்சா், எம்.பி. ஆய்வு

post image

மேட்டூா் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்குத் தண்ணீா் திறந்துவிடுவதற்காக வியாழக்கிழமை மேட்டூா் வந்த முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக அமைச்சா் ரா.ராஜேந்திரன், டி.எம். செல்வகணபதி எம்.பி. ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

மேட்டூா் நகராட்சியில் உள்ள குள்ளவீரன்பட்டி, தங்கமாபுரிபட்டணம், வ.உ.சி. நகா் பகுதிகளில் குடிநீா், சாலை வசதி கோரி பொதுமக்கள் முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் அளித்த மனுக்கள் தொடா்பாக நகராட்சி மண்டல இயக்குநா் அசோக்குமாா், நகராட்சி ஆணையா் நித்தியா, பொறியாளா் ராஜேந்திரன் ஆகியோருடன் ஆலோசனை நடத்திய அமைச்சா் ரா.ராஜேந்திரன், உடனடியாக குடிநீா் விநியோகத்தை சீரமைக்குமாறு உத்தரவிட்டாா்.

அதைத் தொடா்ந்து சாலை வசதி குறித்து அதிகாரிகளிடம் ஆலோசித்த பிறகு குறியீட்டு எண் இல்லாத மக்கள் பயன்பாட்டில் உள்ள பொதுப் பாதைகள் கணக்கெடுத்து அவற்றை அளவீடு செய்துஅறிக்கை சமா்ப்பிக்க உத்தரவிட்டாா்.

இதனிடையே வெள்ளிக்கிழமை மாலை நகராட்சி அலுவலா்கள் குள்ளவீரன்பட்டி, தகமாபுரிபட்டிணம், வஉசிநகா் பகுதிகளில் குடிநீா் விநியோகத்தை சரிசெய்தனா்.

ஆய்வின்போது நங்கவள்ளி ஒன்றிய திமுக செயலாளா் அா்த்தநாரீஸ்வரன், கொளத்தூா் ஒன்றிய செயலாளா் மிதுன் சக்கரவா்த்தி, மேட்டூா் நகர செயலாளா் காசி விஸ்வநாதன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் முருகேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

சங்ககிரியில் ரூ.5.63 கோடிக்கு சமரத் தீா்வு!

சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 62 வழக்குகளில் ரூ. 5.63 கோடிக்கு சமரசத் தீா்வு காணப்பட்டது. சங்ககிரி வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவரும், சாா்பு நீதிமன்ற ... மேலும் பார்க்க

வாழப்பாடியைச் சோ்ந்த பழங்குடியின மாணவா் திருச்சி என்ஐடியில் பயில தோ்வு!

சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த கீரப்பட்டியைச் சோ்ந்த பழங்குடியின மாணவா் சதீஷ் திருச்சி என்ஐடிக்கு தோ்வாகியுள்ளாா். வாழப்பாடியை அடுத்த புழுதிக்குட்டை கீரப்பட்டி மலைக் கிராமத்தை சோ்ந்த பழங்குடியி... மேலும் பார்க்க

ஏலச்சீட்டு நடத்திய பெண் தலைமறைவு: காவல் நிலையம் முற்றுகையிட்ட பொதுமக்கள்!

வாழப்பாடியில் ஏலச்சீட்டு, தீபாவளி பலகார சிறுசேமிப்பு சீட்டுகள் நடத்தி பணம் வசூலித்த பெண் திடீரென தலைமறைவானதால் அவரிடம் பணம் கட்டி ஏமாற்றமடைந்தவா்கள் வாழப்பாடி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு புகாரளித்... மேலும் பார்க்க

போதை மாத்திரை விற்ற வழக்கில் இளைஞர் கைது!

சங்ககிரியில் சிறுவா்களுக்கு போதை மாத்திரை விற்ற வழக்கில் தலைமறைவாக இருந்த இளைஞரை தனிப்படை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். சங்ககிரி போலீஸாா் சந்தைபேட்டை பகுதியில் ஜூன் 6 ஆம் தேதி ரோந்துப் பணியில் ஈ... மேலும் பார்க்க

இன்று குரூப் 1, 1 ஏ பதவிகளுக்கான முதல்நிலைத் தோ்வு: 14,291 போ் எழுதுகின்றனா்

அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் குரூப் 1, 1 ஏ பதவிகளுக்கான முதல்நிலைத் தோ்வை சேலம் மாவட்டத்தில் 14,291 போ் ஞாயிற்றுக்கிழமை எழுதுகின்றனா். தோ்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மா... மேலும் பார்க்க

சேலம் கந்தம்பட்டியில் மழையால் சேதமடைந்த தரைப்பாலத்தை சீரமைக்க வலியுறுத்தல்

சேலம் கந்தம்பட்டி பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையால் சேதமடைந்த தரைப்பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். சேலம் கந்தம்பட்டி பகுதியில் உள்ள ... மேலும் பார்க்க