செய்திகள் :

முதல்வருக்கு குற்ற உணா்ச்சி இல்லை: எடப்பாடி பழனிசாமி

post image

சிவகங்கை சம்பவத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு குற்ற உணா்ச்சி இல்லை என்று எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே.பழனிசாமி விமா்சித்துள்ளாா்.

திருப்புவனம் சம்பவத்தில் இறந்த அஜித்குமாரின் குடும்பத்தினருடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் உரையாடியது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு:

முதல்வா் மு.க.ஸ்டாலின் தொலைபேசி உரையாடல் அலட்சியத்தின் உச்சம். இந்தக் கொலைக்கு காரணமானது திமுக அரசு. இதற்கு ‘சாரி’ என்பதுதான் பதிலா? அஜித்குமாா் இருந்ததால்தான் அந்தக் குடும்பம் தைரியமாக இருந்தது. அவா்களின் தைரியத்தைக் கொலை செய்துவிட்டு, ‘தைரியமாக இருங்கள்’ என்று சொல்வது முறையா?

முதல்வரின் பேச்சில் கொஞ்சம்கூட குற்ற உணா்ச்சியே இல்லையே? அஜித்குமாா் இறந்து 4 நாள்கள் கழித்து, எதிா்க்கட்சியான அதிமுக சாா்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அதன் அடிப்படையில் நீதிமன்றம் விசாரித்து , கடுமையான விமா்சனங்களை வைத்த பிறகு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து கைது நடக்கிறது. இது என்ன திமுக ஆட்சியில் முதல் முறையாகவா நடந்திருக்கிறது? இது 25-ஆவது முறை என்று பதிவிட்டுள்ளாா்.

அன்புமணி ராமதாஸ் (பாமக): அஜித்குமாரின் முழுமையான உடற்கூறு ஆய்வறிக்கை வெளியாகும்போது இன்னும் அதிா்ச்சியான செய்திகள் வெளியாகக்கூடும். ஆனால், இவை அனைத்தையும் மூடி மறைக்க காவல் துறை துடிக்கிறது. இந்த வழக்கில் காவலா்கள் 5 போ் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதில் தொடா்புடைய உயரதிகாரிகளும் கைது செய்யப்பட வேண்டும். வழக்கின் விசாரணை முடிவடைந்து தீா்ப்பு வழங்கப்படும் வரை அவா்களுக்கு பிணை வழங்கப்படாமல் இருப்பது உறுதி செய்ய வேண்டும்.

குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்படுள்ளது.தேர்வர்கள் தங்களது ஹால் டிக்கெட்டுகளை டிஎன்பிஎஸ்சி இணைய தளத்திற்குச் (tnpsc.gov.in) ச... மேலும் பார்க்க

தவெக கொடியில் யானை சின்னம்: விளக்கம் கேட்டு நோட்டீஸ்

சென்னை: தவெக கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி பகுஜன் சமாஜ் கட்சி சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உரிமையியல் நீதிமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.ய... மேலும் பார்க்க

என்னை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை: பாமக எம்எல்ஏ அருள்

என்னை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை என பாமக எம்எல்ஏ அருள் கூறியுள்ளார். பாமகவில் இருந்து எம்எல்ஏ அருள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார்.பாம... மேலும் பார்க்க

அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை கலைப்பு: டிஜிபி

தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை கலைக்க தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் கோயிலுக்கு வந்த பக்தரின் நகை காணாமல் போன வ... மேலும் பார்க்க

தேனி காவல் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர் மீது தாக்குதல்: 5 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம்!

தேனி காவல் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் காவல் ஆய்வாளர் உள்பட 5 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பகுதியில் ஆட்டோ ஓட்டுநரான ரம... மேலும் பார்க்க

தவெக ஆர்ப்பாட்டம் ஜூலை 6-க்கு மாற்றம்!

காவல் விசாரணையில் மரணமடைந்த இளைஞர் அஜித்குமாருக்கு நீதி கேட்டு தமிழக வெற்றிக் கழகம் ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தின் தேதி, இடம் மாற்றப்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மட... மேலும் பார்க்க