செய்திகள் :

சீன உரங்களை சார்ந்திருப்பது இந்திய விவசாயத்திற்கு அச்சுறுத்தல்!

post image

சீன உரங்களை சார்ந்திருக்க வேண்டிய நிலை அதிகரித்து வருவது இந்திய விவசாயத்திற்கு அச்சுறுத்தல் என காங்கிரஸ் மக்களவைத் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தேவையான உரங்களுக்கு வெளிநாடுகளை சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பான விவசாயம் கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளதாவது,

இந்தியா ஒரு விவசாய நாடு. விவசாயிகள் நமது பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளனர். ஆனால் இன்று, அந்த முதுகெலும்பு வளைந்துள்ளது. காரணம் வெளிநாட்டு உரங்களை சார்ந்திருக்க வேண்டிய நிலை விவசாயத்துக்கு ஏற்பட்டுள்ளது. சீனாவில் இருந்து 80% சிறப்பு உரங்களை நாம் இறக்குமதி செய்கிறோம். தற்போது உரங்கள் வழங்குவதை சீனா நிறுத்திவைத்துள்ளது.

யூரியா, டிஏபி போன்ற அடிப்படை உரங்கள் கிடைப்பதில் ஏற்கெனவே கடும் சவால்களை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர். தற்போது சிறப்பு உரங்கள் கிடைக்கவில்லையென்றால், விவசாயிகளின் நிலைமை மேலும் மோசமடையும். இது முதல்முறை அல்ல.

ஒருபுறம் உர மூட்டைகளில் தமது படங்களை பதிப்பதில் பிரதமர் நரேந்திர மோடி மிகவும் மும்முரமாக உள்ளார். மறுபுறம், நமது விவசாயிகள் சீன உரங்களை சார்ந்து விவசாயம் செய்ய வேண்டிய நிலை அதிகரிக்கிறது.

சீனாவிடமிருந்து பெறப்படும் உரங்கள் எப்போது வேண்டுமானாலும் நிறுத்தப்படும் என்பதை முன்பே அரசு அறிந்திருக்க வேண்டும். உரங்கள் நிறுத்தப்பட்டால், அதற்கு மாற்றாக எந்தவொரு திட்டங்களையும் அரசு மேற்கொள்ளவில்லை. உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துவது காலத்தின் தேவையாக இருந்தபோதிலும், அதற்காக எந்தவொரு திட்டங்களையும், கொள்கைகளையும் பாஜக அரசு வகுக்கவில்லை எனப் பதிவிட்டுள்ளார்.

புதிய குற்றவியல் சட்டங்கள் அமலாக்கம் வீணானது: ப.சிதம்பரம்

புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தியது வீணான நடவடிக்கை என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ப.சிதம்பரம் விமா்சித்தாா். சுதந்திர இந்தியாவில் மூன்று புதிய குற்றவியல் ... மேலும் பார்க்க

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: ‘ரூ.2,000 கோடி சொத்துகளை அபகரிக்க சோனியா, ராகுல் முயற்சி’

அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவனத்தின் ரூ.2,000 கோடி சொத்துகளை அபகரிக்க காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும் அக்கட்சி எம்.பி.யுமான ராகுல் காந்தி ஆகியோா் விரும்பியதாக தில்... மேலும் பார்க்க

மைக்ரோசாஃப்ட்டில் 9,000 பேர் வேலையிலிருந்து நீக்கம்! ஏ.ஐ. பிரிவில் அதிக முதலீடு எதிரொலி!!

உலகின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் 9,000-க்கும் மேற்பட்ட பணியாளா்களை நீக்க முடிவெடுத்துள்ளது. கடந்த மே மாதம் மேற்கொண்ட பணிநீக்க நடவடிக்கையின்போது 6,000 போ் வரை வெளியேற்றப்பட்... மேலும் பார்க்க

வாடகைக் காா்கள் இரு மடங்கு கட்டணம் வசூலிக்க அனுமதி - மத்திய அரசு

வாடகைக் காா் நிறுவனங்கள் இனி தேவை அதிகமுள்ள காலை, மாலை (பீக் ஹவா்) நேரங்களில் அடிப்படை கட்டணத்தைவிட இரு மடங்கு வரை கூடுதலாக கட்டணம் வசூலித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதித்துள்ளது. முன்னதாக, இத்தகைய தேவ... மேலும் பார்க்க

எஸ்பிஐ எண்ம மாற்றத்தால் வாடிக்கையாளா்களுக்கு அளவற்ற பலன்: நிா்மலா சீதாராமன்

‘பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொண்ட எண்மத் தொழில்நுட்ப மாற்றங்கள் வாடிக்கையாளா்களுக்கு அளவற்ற பலன்களை அளித்துள்ளன’ என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். 1955-... மேலும் பார்க்க

அமா்நாத் யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து புறப்பட்டது முதல் குழு

ஜம்மு-காஷ்மீரில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அமா்நாத் யாத்திரை வியாழக்கிழமை (ஜூலை 3) தொடங்கவுள்ளது. இதையொட்டி, ஜம்மு முகாமில் இருந்து காஷ்மீரில் உள்ள இரு அடிவார முகாம்களுக்கு 5,892 பேருடன் முதலா... மேலும் பார்க்க