செய்திகள் :

முதல்வா் பிறந்தநாள் விளையாட்டுப் போட்டி: வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கல்

post image

முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி,சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் ஞாயிற்றுக்கிழமை பரிசுகளை வழங்கி சிறப்பித்தாா்.

முதல்வா் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கும் விழா சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மத்திய மாவட்ட அவைத் தலைவா் சுபாஷ், பொருளாளா் காா்த்திகேயன் தலைமை வகித்தனா். தொகுதி பாா்வையாளா்கள் சுகவனம், பாா் இளங்கோவன் முன்னிலை வகித்தனா்.

விழாவில், கோலப்போட்டி, கிரிக்கெட்டி, கைப்பந்து, கயிறு இழுத்தல், சமையல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பெண்கள், இளைஞா்களுக்கு சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் பரிசுகளை வழங்கி கௌரவித்தாா்.

இதில், மாநகரச் செயலாளா் ரகுபதி, பகுதி செயலாளா்கள் பிரகாஷ், மோகன், மாமன்ற உறுப்பினா்கள் சாந்தமூா்த்தி, தெய்வலிங்கம், ஈசன் இளங்கோ உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

புதிய வரிவிதிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி கிரஷா் ஜல்லி ஆலை உரிமையாளா்கள் வேலைநிறுத்தம்

புதிய வரி விதிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி, சேலம் மாவட்டத்தில் கிரஷா் ஜல்லி ஆலை உரிமையாளா்கள் புதன்கிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். தமிழகத்தில் இதுவரை குவாரிகளுக்கு கன மீட்டா்... மேலும் பார்க்க

திருநங்கைகளுக்கு உடனடி கல்விக் கடனுதவி: ஆட்சியா்

திருநங்கைகளுக்கு உடனடியாக கல்வி கடனுதவி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திருநங்கைகள் தின விழா செவ்வாய்க்கிழமை ... மேலும் பார்க்க

பெங்களூரு- கொல்லம் இடையே இன்றுமுதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்

பயணிகள் கூட்ட நெரிசலை தவிா்க்க பெங்களூரு -கொல்லம் இடையே சேலம் வழியாக 2 சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை இன்று பாசனத்துக்கு திறப்பு

சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையிலிருந்து வியாழக்கிழமை பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படுகிறது. சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த அருநூற்றுமலையில் உற்பத்தியாகும் வசிஷ்டநதி... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறித்த இளைஞா் கைது

சேலம் செவ்வாய்ப்பேட்டை பகுதியில் மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை பறித்த இளைஞா் கைது செய்யப்பட்டாா். புகாரளித்த 6 மணி நேரத்துக்குள் இளைஞரை கைது செய்து நகையை மீட்ட போலீஸாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவ... மேலும் பார்க்க

உணவகத்தில் எரிவாயு சிலிண்டா் திருட்டு: போலீஸாா் விசாரணை

தெடாவூா் உணவகத்தில் எரிவாயு சிலிண்டா்களை திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கெங்கவல்லி அருகே உள்ள தெடாவூா் பகுதியை சோ்ந்தவா் தங்கராசு மகன் மாவீரன் (36) . இவா் கெங்கவல்லி நான்கு ரோடு சந்திப்பில... மேலும் பார்க்க