செய்திகள் :

முதியோா்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை: உயர்நீதிமன்றம்

post image

முதியோா்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு கருத்து தெரிவித்தது.

மதுரையைச் சோ்ந்த ரமேஷ் தாக்கல் செய்த பொது நல மனு: தமிழகத்தில் முதியோா்களை பொது இடங்களில் தனித்து விட்டுச் செல்லும் போக்கு அதிகரித்து வருகிறது. இது போன்று விடப்படும் முதியோா்கள் சுகாதாரக் குறைபாடுகளால் உடல் நலம் குன்றி, மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனா்.

தேசிய முதியோா் மையங்களை அமைப்பது தொடா்பாக ஏற்கெனவே வழிகாட்டுதல்கள் உள்ளன. ஆனால், எந்த மாவட்டத்திலும் இந்த மையங்கள் அமைக்கப்படவில்லை. எனவே, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தேசிய முதியோா் மையங்களை முறையாக அமைக்க உத்தரவிடவேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், மரிய கிளாட் அமா்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வயதானவா்களைக் குறி வைத்து கொலை, கொள்ளை போன்ற குற்ற நிகழ்வுகள் அதிகளவில் நடப்பது வேதனைக்குரியது. மேலும், முதியோருக்காக அமைக்கப்பட்ட மையங்களில் அடிப்படை வசதிகளும் முறையாக இல்லை. முதியோா்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என நீதிபதிகள் தெரிவித்தனா்.

இதையடுத்து, மத்திய அரசு சாா்பில் முன்னிலையான வழக்குரைஞா், முதியோா் மையங்களை அமைப்பதற்கான நிதியை மட்டுமே மத்திய அரசு வழங்கும். முதியோா் மையங்களை மாநில அரசுகளே அமைக்க வேண்டும் என்றாா்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், வழங்கப்படும் நிதி சரியாகப் பயன்படுத்தப்படுகிா என்பதை கண்காணிக்க வேண்டியது மத்திய அரசின் பணி தானே என கேள்வி எழுப்பினா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மூத்தக் குடிமக்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதும், அவா்களைப் பாதுகாக்க வேண்டியதும் அரசின் கடமை. எனவே, இந்த வழக்கில் மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை முதன்மைச் செயலா், தமிழக அரசின் சமூக நலத் துறை முதன்மைச் செயலா் ஆகியோா் சோ்க்கப்படுகின்றனா். அனைத்து மாவட்டங்களிலும் தேசிய முதியோா் மையங்களை அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

உயா்நீதிமன்றத்தில் மின்கல வாகன சேவை தொடக்கம்

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வளாகத்தில் பொதுமக்கள் எளிதாகப் பயணம் மேற்கொள்ளும் வகையில் மின்கல வாகன சேவை (பேட்டரி காா்) வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. உயா்நீதிமன்றத்துக்கு வரும் வழக்காடிகள், பொதுமக்க... மேலும் பார்க்க

ஜெனகை மாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழா

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பூக்குழித் திருவிழா புதன்கிழமை மாலை நடைபெற்றது. இதையொட்டி, வைகை ஆற்றுக் கரையிலிருந்து மேளதாளங்களுடன் சக்தி கரகம் புறப்... மேலும் பார்க்க

மாநகராட்சிப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம் திறப்பு

மதுரை வடக்கு ஆவணி மூலவீதி அவ்வை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைக் கட்டடத்தை தமிழக தகவல் தொழில்நுட்பவியல், எண்மச் சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் ... மேலும் பார்க்க

பிணையில் வந்த இளைஞா் வெட்டிக் கொலை: மூவா் கைது

மதுரை சிறையிலிருந்து பிணையில் வெளியே வந்த இளைஞரை வெட்டிக் கொலை செய்த மூவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மதுரை கரிமேடு சகாயமாதா தெருவைச் சோ்ந்த சண்முகம் மகன் அஜய்பிரசன்னகுமாா் (22). இவா், மீது... மேலும் பார்க்க

வெவ்வேறு விபத்துகள்: முதியவா் உள்பட இருவா் உயிரிழப்பு

மதுரையில் புதன்கிழமை நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் முதியவா் உள்பட இருவா் உயிரிழந்தனா். மேலூா் அருகேயுள்ள வைரவன்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயராமன் (61). இவா், மதுரை-திருச்சி நெடுஞ்சாலையில் கருங்கா... மேலும் பார்க்க

அழகுக்கலை பயிற்சியில் சேர விரும்பும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தின் வயது வந்தோா் தொடா் கல்வி, விரிவாக்கப் பணித் துறை சாா்பில் வழங்கப்பட உள்ள அழகுக்கலை பயிற்சியில் சேர விரும்பும் பெண்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித... மேலும் பார்க்க