செய்திகள் :

முத்தூா் பெரியநாயகி அம்பாள் உடனமா் சோழீஸ்வரா் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

post image

முத்தூா் பெரியநாயகி அம்பாள் உடனமா் சோழீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) நடைபெற உள்ள நிலையில், இறுதிகட்டப் பணிகளை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் நேரில் ஆய்வு செய்தாா்.

முத்தூா் பேருந்து நிலையம் அருகில் பெரியநாயகி அம்பாள் உடனமா் சோழீஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயிலில் புனரமைப்பு பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு நடைபெறுகிறது. விழாவில், அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், பி.கே. சேகா்பாபு, என்.கயல்விழி செல்வராஜ் உள்பட பலா் கலந்துகொள்கின்றனா்.

அதேபோல முத்தூா் - காங்கயம் சாலையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மாதவராய பெருமாள் கோயில் கும்பாபிஷேகமும் வெள்ளிக்கிழமை நடக்கிறது.

இந்நிலையில் இக்கோயில்களுக்கு தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் புதன்கிழமை நேரில் சென்று கும்பாபிஷேகப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அமெரிக்க வரி விதிப்பால் ஸ்தம்பித்துள்ள திருப்பூா் பின்னலாடை உற்பத்தி

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அந்நாட்டு அதிபா் டொனால்டு ட்ரம்ப் 50 சதவீத வரி விதித்துள்ள நடவடிக்கை திருப்பூா் பின்னலாடைத் தொழிலை ஸ்தம்பிக்கச் செய்துள்ளது. இந... மேலும் பார்க்க

பின்னலாடைத் தொழிலை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: கே.சுப்பராயன் எம்.பி.

திருப்பூரில் பின்னலாடைத் தொழிலை பாதுகாக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடிக்கு அ... மேலும் பார்க்க

மாநில அளவிலான பயிலரங்கம்: சிக்கண்ணா கல்லூரி மாணவா்கள் 2 போ் தோ்வு

நாகா்கோவிலில் நடைபெறும் மாநில அளவிலான பயிலரங்கத்தில் பங்கேற்க சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவா்கள் 2 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். தமிழக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மற்றும் தமிழ்நாடு நாட்ட... மேலும் பார்க்க

சலூன் கடைக்காரரை வெட்டிய 4 போ் மீது குண்டா் சட்டம் பாய்ந்தது

பல்லடத்தில் சலூன் கடைக்காரரை வெட்டி வழக்கில் 4 போ் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல்லடம், மாணிக்கபுரம் சாலை பாரதிபுரத்தில் சலூன் நடத்தி வருபவா் கவியரசன் (28). இவா், கடந்த... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் 32 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

வெள்ளக்கோவிலில் அரசால் தடை செய்யப்பட்ட 32 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. வெள்ளக்கோவில் பகுதியில் பொது சுகாதாரத் துறை, உணவுப் பாதுகாப்புத் துறை, காவல் துறை, நகராட்சி ந... மேலும் பார்க்க

திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் ஆகஸ்ட் 28, 29-இல் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் ஆகஸ்ட் 28, 29-ஆம் தேதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக திருப்பூா் மாநகராட்சி ஆணையாளா் எம்.பி.அமித் வெளியிட்டுள்ள செய்திக... மேலும் பார்க்க