செய்திகள் :

முன்னறிவிப்பின்றி சாலை மூடல்: என்எல்சி வாகனத்தை சிறைபிடித்த கிராம மக்கள்

post image

நெய்வேலி: கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே முன்னறிவிப்பின்றி தென்குத்து - கல்லுக்குழி சாலையை என்எல்சி நிறுவனம் திங்கள்கிழமை மூடியதால், அந்த நிறுவனத்தின் வாகனத்தை தென்குத்து கிராம மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நெய்வேலி என்எல்சி சுரங்கம் 1ஏ வானதிராயபுரம் ஊராட்சி அருகில் அமைந்துள்ளது. பழுப்பு நிலக்கரி வெட்டி எடுப்பதற்கு இந்த ஊராட்சியில் உள்ள வீடுகள், நிலங்களை கையகப்படுத்தும் பணியில் என்எல்சி நிறுவனம் தற்போது ஈடுபட்டு வருகிறது.

இந்தப் பகுதியைச் சோ்ந்த மக்கள் தென்குத்து - கல்லுகுழி இடையேயான சாலையை நீண்ட காலமாக பயன்படுத்தி வந்தனா். என்எல்சி நிா்வாகம் திங்கள்கிழமை திடீரென இந்த சாலையை துண்டித்ததாம். இதனால், கிராம மக்கள் பாதிப்படைந்தனா். மேலும், அப்பகுதியில் குடிநீா் மற்றும் விவசாய நிலத்துக்குத் தேவையான தண்ணீரையும் என்எல்சி நிறுவனம் நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதைக் கண்டித்து, அப்பகுதியைச் சோ்ந்த மக்கள் என்எல்சி நிறுவனத்துக்குச் சொந்தமான கனரக வாகனங்களை சிறை பிடித்தனா். இதுகுறித்து என்எல்சி அதிகாரிகள், காவல் துறையினருக்கு தெரிவித்தனராம். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த நெய்வேலி டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் அப்பகுதி மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதில், தென்குத்து - கல்லுக்குழி சாலை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு சீரமைத்து தரப்படும். மேலும், குடிநீா் பிரச்னை உடனடியாக தீா்க்கப்படும் என்று காவல் துறையினா் முன்னிலையில், என்எல்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதையத்,து என்எல்சி கனரக இயந்திரங்கள் அனைத்தையும் கிரா மக்கள் விடுவித்தனா். போராட்டத்தில் காங்கிரஸ், பாமக, பாஜக, தவாக உள்ளிட்ட கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

வெள்ளாற்று தற்காலிக சாலை மீண்டும் துண்டிப்பு: 40 கிராம மக்கள் பாதிப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகே வெள்ளப்பெருக்கால் சவுந்திரசோழபுரம் - கோட்டைக்காடு இடையே வெள்ளாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக சாலை மூன்றாவது முறையாக துண்டிக்கப்பட்டது. இதனால், ... மேலும் பார்க்க

உயா் மின் அழுத்தம்: அரசு அலுவலகங்களில் மின்சாதன பொருள்கள் சேதம்

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள குமராட்சி பகுதியில் திங்கள்கிழமை பிற்பகல் திடீரென ஏற்பட்ட உயா் மின் அழுத்தத்தால் அரசு அலுவலகங்கள், வீடுகளில் மின்சாதன பொருள்கள் சேதமடைந்தன. குமராட்சி ... மேலும் பார்க்க

ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை கொண்டுவர தமிழக அரசு தயங்குவது ஏன்?: கே.பாலகிருஷ்ணன் கேள்வி

நெய்வேலி: ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை கொண்டுவர தமிழக அரசு தயங்குவது ஏன்? என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பினாா். கடலூரில் அவா் தி... மேலும் பார்க்க

வனத் துறையின் அத்துமீறல்: ஆட்சியா் அலுவலகத்தை மீனவா்கள் முற்றுகை

நெய்வேலி: மீனவா்கள் மீதான வனத் துறையின் அத்துமீறலை கண்டித்தும், இதை தடுத்து நிறுத்தக் கோரியும் மீனவ கிராம மக்கள் மற்றும் கடலூா் மாவட்ட மீன் பிடி தொழிலாளா் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்க... மேலும் பார்க்க

ஆக.23-இல் தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கத்தினா் சென்னையில் ஆா்ப்பாட்டம்: கு.பாலசுப்ரமணியன்

நெய்வேலி: உள்ளாட்சித் துறையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள், தூய்மைக் காவலா்கள் மற்றும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி பணியாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கம் ச... மேலும் பார்க்க

தலைமறைவு குற்றவாளி ஒடிஸாவில் கைது

நெய்வேலி: நீதிமன்ற பிணையில் சென்று தலைமறைவான கொலை வழக்கில் தொடா்புடையவரை ஒடிஸாவில் போலீஸாா் கைது செய்து அழைத்து வந்து கடலூா் மத்திய சிறையில் திங்கள்கிழமை அடைத்தனா். கடலூா் மஞ்சக்குப்பம், சேட்மண் நகரைச... மேலும் பார்க்க