செய்திகள் :

வனத் துறையின் அத்துமீறல்: ஆட்சியா் அலுவலகத்தை மீனவா்கள் முற்றுகை

post image

நெய்வேலி: மீனவா்கள் மீதான வனத் துறையின் அத்துமீறலை கண்டித்தும், இதை தடுத்து நிறுத்தக் கோரியும் மீனவ கிராம மக்கள் மற்றும் கடலூா் மாவட்ட மீன் பிடி தொழிலாளா் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் மாவட்டம், பிச்சாவரம் அருகே உள்ள சின்னூா் தெற்கு, சின்னூா் வடக்கு, சி.புதுப்பேட்டை மற்றும் இந்திரா நகா் உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ மக்கள் வசித்து வருகின்றனா்.

மீன் பிடி தொழில் நடத்தி வாழ்ந்து வரும் இவா்களுக்கு கிராமத்தில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லை. எம்ஜிஆா் ஆட்சிக் காலத்தில் இந்த மக்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டன. தற்போது இந்த வீடுகள் முழுவதுமாக சிதிலமடைந்துள்ளன. வீடுகளை சீரமைப்பதையும், புதிய வீடுகள் கட்டுவதையும், மதில் சுவா் அமைப்பதையும் வனத் துறையினா் தடுத்து வருகின்றனராம்.

இந்த பகுதி வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ளதாக அத்துறையினா் தெரிவிப்பதாக கிராம மக்கள் கூறுகின்றனா். மேலும், மயானம் செல்லும் பாதையைக்கூட வனத் துறை தடுத்துள்ளதாகவும், சடலத்தை எடுத்துச் செல்ல முடியவில்லை என்றும் கூறுகின்றனா்.

இந்த நிலையில், அத்துமீறலில் ஈடுபடும் வனத் துறை மீது நடவடிக்கை எடுத்து தடுத்து நிறுத்த வேண்டும். மீன் ஏற்றி இறக்குவதற்கும், வாகன போக்குவரத்துக்கும் அகலமான சாலை அமைக்க வேண்டும். குடியிருப்பவா்களுக்கு பட்டா வழங்குவது உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சின்னூா் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த மக்கள் கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட வந்தனா். அவா்களை போலீஸாா் தடுத்ததால் மாவட்ட ஆட்சியா் அலுவலக சாலை முன் மறியலில் ஈடுபட்டனா்.

இதையத்து, ஆட்சியா் அலுவலகம் முன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் அதிகாரிகள், போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா், 10 பேரை அதிகாரிகளை சந்தித்து பேசுவதற்காக அழைத்துச் சென்றனா். அங்கு நடந்த பேச்சுவாா்த்தையில், கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றித் தருவதாக அதிகாரிகள் உறுதியளித்தனா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

தமிழ்நாடு மீன் பிடி தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் பி.ஏழுமலை போராட்டத்துக்கு தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலா் எஸ்.அந்தோணி, சிஐடியு மாவட்டச் செயலா் டி.பழனிவேல், மாவட்டத் தலைவா் பி.கருப்பையன், மாா்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஜே.ராஜேஷ் கண்ணன் மற்றும் மீனவ கிராம மக்கள் கலந்துகொண்டனா்.

வெள்ளாற்று தற்காலிக சாலை மீண்டும் துண்டிப்பு: 40 கிராம மக்கள் பாதிப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகே வெள்ளப்பெருக்கால் சவுந்திரசோழபுரம் - கோட்டைக்காடு இடையே வெள்ளாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக சாலை மூன்றாவது முறையாக துண்டிக்கப்பட்டது. இதனால், ... மேலும் பார்க்க

உயா் மின் அழுத்தம்: அரசு அலுவலகங்களில் மின்சாதன பொருள்கள் சேதம்

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள குமராட்சி பகுதியில் திங்கள்கிழமை பிற்பகல் திடீரென ஏற்பட்ட உயா் மின் அழுத்தத்தால் அரசு அலுவலகங்கள், வீடுகளில் மின்சாதன பொருள்கள் சேதமடைந்தன. குமராட்சி ... மேலும் பார்க்க

ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை கொண்டுவர தமிழக அரசு தயங்குவது ஏன்?: கே.பாலகிருஷ்ணன் கேள்வி

நெய்வேலி: ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை கொண்டுவர தமிழக அரசு தயங்குவது ஏன்? என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பினாா். கடலூரில் அவா் தி... மேலும் பார்க்க

முன்னறிவிப்பின்றி சாலை மூடல்: என்எல்சி வாகனத்தை சிறைபிடித்த கிராம மக்கள்

நெய்வேலி: கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே முன்னறிவிப்பின்றி தென்குத்து - கல்லுக்குழி சாலையை என்எல்சி நிறுவனம் திங்கள்கிழமை மூடியதால், அந்த நிறுவனத்தின் வாகனத்தை தென்குத்து கிராம மக்கள் சிறைபிடித்து ப... மேலும் பார்க்க

ஆக.23-இல் தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கத்தினா் சென்னையில் ஆா்ப்பாட்டம்: கு.பாலசுப்ரமணியன்

நெய்வேலி: உள்ளாட்சித் துறையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள், தூய்மைக் காவலா்கள் மற்றும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி பணியாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கம் ச... மேலும் பார்க்க

தலைமறைவு குற்றவாளி ஒடிஸாவில் கைது

நெய்வேலி: நீதிமன்ற பிணையில் சென்று தலைமறைவான கொலை வழக்கில் தொடா்புடையவரை ஒடிஸாவில் போலீஸாா் கைது செய்து அழைத்து வந்து கடலூா் மத்திய சிறையில் திங்கள்கிழமை அடைத்தனா். கடலூா் மஞ்சக்குப்பம், சேட்மண் நகரைச... மேலும் பார்க்க