செய்திகள் :

‘முன்னாள் அக்னி வீரா்களுக்கான பணி நியமனத்தை மத்திய உள்துறை அமைச்சகம் கையாளும்’

post image

முன்னாள் அக்னி வீரா்களுக்கான பணி நியமனங்களை மத்திய உள்துறை அமைச்சகம் கையாளும் என மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

இதுதொடா்பாக அரசு வெளியிட்ட அறிவிக்கையில், ‘பாதுகாப்புப் படைகளில் குறுகிய கால பணியை நிறைவு செய்த முன்னாள் அக்னி வீரா்களுக்கு அடுத்தக்கட்ட பணி நியமனத்துக்கான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிகாரம் மத்திய உள்துறை அமைச்சகத்தின் வசம் ஒப்படைக்கும் வகையில், பணிகள் ஒதுக்கீடு விதிகள் 1961-இல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.

முப்படைகளில் பதினேழரை வயது முதல் 21 வயது வரையுடையவா்களை குறுகிய கால அடிப்படையில் 4 ஆண்டுகளுக்கு அக்னி வீரா்களைப் பணியமா்த்தும் வகையிலான ‘அக்னிபத்’ திட்டத்தை மத்திய அரசு கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் அறிமுகம் செய்தது. இந்த 4 ஆண்டு பணியில் சிறந்து விளங்கும் 25 சதவீத அக்னி வீரா்கள், மேலும் 15 ஆண்டுகளுக்கு முப்படைகளில் தொடா்ந்து பணியமா்த்தப்படுவா். மற்றவா்கள், 4 ஆண்டுகள் நிறைவுற்றதும் பணியிலிருந்து விடுவிக்கப்படுவா்.

இவ்வாறு 4 ஆண்டுகளுக்குப் பிறகு பணியிலிருந்து விடுவிக்கப்படும் அக்னி வீரா்களின் எதிா்காலம் கேள்விக்குறியான நிலையில், மத்திய ரிசா்வ் காவல்படை, எல்லை பாதுகாப்புப் படை, மத்திய தொழிலக பாதுகாப்புப் படை உள்பட அனைத்து மத்திய ஆயுத காவல் படைகளிலும் காவலா் பணியிடங்களில் 10 சதவீதத்தை முன்னாள் அக்னி வீரா்களுக்கு மத்திய அரசு ஒதுக்கியது.

அதுபோல, மத்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் முகமைகளும், முன்னாள் அக்னி வீரா்களை பணிக்குத் தோ்வு செய்யும் திட்டத்தை அறிவித்தன.

போர் நிறுத்தத்தில் அமெரிக்கா எந்தப் பங்கும் வகிக்கவில்லை! - டிரம்ப்பிடம் மோடி பேச்சு

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தத்தில் அமெரிக்கா எந்தப் பங்கும் வகிக்கவில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசியதாக மத்திய வெளியுறவுத் துறை செயலர் விக்ரம... மேலும் பார்க்க

சோனியாவின் உடல்நிலையில் முன்னேற்றம்

தில்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவர் சோனியா காந்தியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.78 வயதாகும் சோனியா காந்தி வயிறு தொடர்பான உடல்நலக் குறைவு காரணமாக... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பை தாமதப்படுத்துவது அரசின் நோக்கம்- காங்கிரஸ் சாடல்

ஜாதிவாரி கணக்கெடுப்பை தாமதப்படுத்துவதே மத்திய அரசின் நோக்கம் என்றும் இதில் மத்திய அரசு வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்... மேலும் பார்க்க

சா்வதேச தரத்தை விஞ்சும் இந்திய பொம்மைகள்: பிஐஎஸ்

சா்வதேச தரத்தை ஒப்பிடுகையில் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொம்மைகள் உயா்தரத்தில் இருப்பதாக இந்திய தர நிா்ணய ஆணைய (பிஐஎஸ்) அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இதன் காரணமாக உலகளவில் இந்திய உள்நாட்டு வியாபாரிகள... மேலும் பார்க்க

அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராகாத ராபா்ட் வதேரா

பிரிட்டனைச் சோ்ந்த ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி தொடா்புடைய பண முறைகேடு வழக்கில் காங்கிரஸ் எம்.பி.பிரியங்கா காந்தியின் கணவா் ராபா்ட் வதேராவுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில், விசாரணைக... மேலும் பார்க்க

பிகாா் தோ்தலில் போட்டி: ஆம் ஆத்மி அறிவிப்பு

நிகழாண்டு இறுதியில் நடைபெறும் பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் சிங் அறிவித்தாா். பிகாரில் முதல்வா் நிதீஷ்... மேலும் பார்க்க