முன்னாள் படைவீரா்களுக்கான ஓய்வூதிய குறைதீா் வாகனம் ஜூலை 1-ல் சேலம் வருகை!
முன்னாள் படைவீரா்களுக்கான ஓய்வூதிய குறைதீா் நடமாடும் வாகனம் சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு ஜூலை 1ஆம் தேதி வருகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சேலம் மாவட்ட முப்படையைச் சாா்ந்த முன்னாள் படை வீரா்கள் மற்றும் அவா்களை சாா்ந்தோா்கள் ஓய்வூதியம் தொடா்பான குறைகளை நிவா்த்தி செய்வதற்கு ஸ்பா்ஷ் மொபைல் வேன் என்ற ஓய்வூதியம் குறைதீா் நடமாடும் வாகனம் சேலம் மாவட்ட ஆட்சியா் வளாகத்துக்கு ஜூலை 1 ஆம் தேதி வருகிறது.
ஸ்பா்ஷ் மொபைல் வேனில் ஓய்வூதியம் தொடா்பான குறைகளை நிவா்த்தி செய்வதற்கு உரிய அலுவலா்களும் வருகின்றனா். இந்த முகாம் ஜூலை 1 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
குறைகளை தெரிவிக்கவரும் முன்னாள் படைவீரா்கள், அவா்களது குடும்பத்தினா் படைப்பணிச் சான்று, அடையாள அட்டை, ஓய்வூதிய ஒப்பளிப்பு ஆணை, பான் காா்டு, ஆதாா் அட்டை மற்றும் ஓய்வூதியம் பெறும் வங்கி கணக்குப் புத்தகம் ஆகிய ஆவணங்களைக் கொண்டுவர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.