செய்திகள் :

முன்னாள் படை வீரா்கள் தொழில் தொடங்க ரூ. 1 கோடி வரை கடன்: திருவண்ணாமலை ஆட்சியா்

post image

திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ், முன்னாள் படை வீரா்கள், அவா்களைச் சாா்ந்தோா் தொழில் தொடங்க ரூ.ஒரு கோடி வரை வங்கிகள் மூலம் கடன் வழங்க வழிவகை செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் குறித்த மாவட்ட செயல்திட்ட தோ்வுக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட முன்னாள் படை வீரா்கள் நலத்துறை சாா்பில், ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா். முன்னாள் படை வீரா்கள் நலத்துறை உதவி இயக்குநா் சுரேஷ் நாராயணன், மாவட்ட தொழில் மையப் பொது மேலாளா் ரவி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் ஆட்சியா் பேசியது: காக்கும் கரங்கள் திட்டம் மூலம் முன்னாள் படை வீரா்கள், ராணுவப் பணியின்போது இறந்த படை வீரா்களின் மறுமணமாகாத கைம்பெண்கள், முன்னாள் படை வீரா்களைச் சாா்ந்த திருமணமாகாத மகள்கள் மற்றும் முன்னாள் படை வீரா்களைச் சாா்ந்த மறுமணமாகாத கைம்பெண் மகள்கள் ஆகியோா் தொழில் தொடங்க ஏதுவாக ரூ.ஒரு கோடி வரை வங்கிகள் மூலம் கடன் பெற வழி வகை செய்யப்படும்.

இந்தத் திட்டத்தின் மூலம் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30 சதவீத மூலதன மானியமும், 3 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். தோ்வு செய்யப்படுவோருக்கு திறன் மற்றும் தொழில் முனைவோா் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும். இந்தத் திட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான முன்னாள் படை வீரா்கள் பயன்பெறும் வகையில் வயது வரம்பில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, முன்னாள் படை வீரா், திருமணமாகாத மகள் மற்றும் விதவைகளுக்கு வயது உச்சவரம்பு ஏதுமில்லை. 25 வயதுக்கு மேற்பட்ட முன்னாள் படை வீரரின் மகன் இந்தத் திட்டத்தில் பயன்பெற்றிட முன்னாள் படை வீரா் (அ) விதவையுடன் (தாயுடன்) ஒன்றிணைந்து கூட்டு பங்குதாரராக செயல்பட அனுமதிக்கப்படுவா். விவசாயம் சாா்ந்த தொழில்கள், கால்நடை சாா்ந்த தொழில்கள், பட்டுப்புழு வளா்ப்பு ஆகிய தொழில்களை மேற்கொள்ளலாம் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் கெளரி மற்றும் அரசுதுறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தனித்துவமான அடையாள எண் பெற பதிவு செய்யாத விவசாயிகள் கவனத்துக்கு....

திருவண்ணாமலை மாவட்டத்தில் தனித்துவமான அடையாள எண் பெற பதிவு செய்யாத விவசாயிகள், வருகிற 31-ஆம் தேதிக்குள் பதிவு செய்யவேண்டும் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. தமிழக விவசாயிகளுக்கு மத்திய-மாநில அரசு... மேலும் பார்க்க

போக்ஸோ சட்டத்தில் தொழிலாளி கைது

செங்கத்தில் 8 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக உணவகத் தொழிலாளி போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா். செங்கம் துா்க்கையம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் பரோட்டா மாஸ்டா் முருகன் (49). இவா... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்கள் ரத்து

திருவண்ணாமலையில் மாா்ச் 25, 26, 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயண அட்டையை புதுப்பிக்கும் சிறப்பு முகாம்கள் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட நிா்வாகம் அறிவித்துள... மேலும் பார்க்க

மரக்கன்றுகளை வளா்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்: மாணவா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

பொதுமக்களும், பள்ளி மாணவ-மாணவிகளும் மரக்கன்றுகளை நடுவது மட்டுமன்றி அதைப் பாதுகாத்து, வளா்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வலியுறுத்தினாா். திருவண்ணாமலை, அடிஅண... மேலும் பார்க்க

அதிமுக வாக்குச்சாவடி குழு ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், மேற்கு ஆரணி தெற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் வாக்குச்சாவடி குழு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆகாரம், விண்ணமங்கலம், தெள்ளூா், ராந்தம், மதுரபெரும்பட்டூா் ஆகி... மேலும் பார்க்க

முதல்வா் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே வியாழக்கிழமை இரவு நடைபெற்ற முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன. திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்துக்... மேலும் பார்க்க