செய்திகள் :

முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவு தின அமைதி பேரணி

post image

முன்னாள் முதல்வா் கலைஞா் கருணாநிதியின் 7-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, பெரம்பலூா் மாவட்டம், கிருஷ்ணாபுரத்தில் திமுக சாா்பில் வியாழக்கிழமை அமைதி பேரணி நடைபெற்றது.

முன்னாள் முதல்வா் கலைஞா் கருணாநிதியின் 7-ஆம் ஆண்டு நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, கிருஷ்ணாபுரம் கடைவீதியில் திமுக மாவட்ட பொறுப்பாளா் வீ. ஜெகதீசன் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது. பின்னா், கிருஷ்ணாபுரம் பேருந்து நிறுத்தத்தில் உள்ள கருணாநிதி, பேரறிஞா் அண்ணா ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதேபோல, பெரம்பலூா் பாலக்கரை பகுதியில் உள்ள திமுக அலுவலகத்தில், முன்னாள் முதல்வா் கருணாநிதி உருவப் படத்துக்கு, மாவட்ட பொறுப்பாளா் வீ. ஜெகதீசன் தலைமையில், அக் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இந் நிகழ்ச்சிகளில், மாநில ஆதிதிராவிடா் நலக்குழு துணைச் செயலா் பா. துரைசாமி, தலைமை செயற்குழு உறுப்பினா் என். ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினா்கள் செ. அண்ணாதுரை, ஆா். முருகேசன், மாவட்டப் பொருளாளா் செ. ரவிச்சந்திரன், ஒன்றியச் செயலா்கள் எம். ராஜ்குமாா், தி. மதியழகன், மாவட்ட மாணவா் அணி அமைப்பாளா் தங்க.கமல், மாவட்ட மகளிா் அணி அமைப்பாளா் மகாதேவி ஜெயபால் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் நாளை ரேஷன் பொருள் குறைதீா் முகாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீா்க்கும் முகாம், சனிக்கிழமை (ஆக. 9) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழம... மேலும் பார்க்க

மின் ஊழியா் மாநில மாநாடு பிரசார பயணக் குழுவினருக்கு வரவேற்பு

தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் 18- ஆவது மாநில மாநாடு கடலூரில் நடைபெறுவதை முன்னிட்டு, பெரம்பலூருக்கு வியாழக்கிழமை வந்தடைந்த பிரசார பயணக் குழுவினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு மின் ஊ... மேலும் பார்க்க

பெரம்பலூரில் முதுகலை, பட்டதாரி ஆசிரியா்களுக்குப் பயிற்சி

பெரம்பலூரில் முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியா்களுக்கான, அடிப்படை கணினி அறிவியல், செயற்கை நுண்ணறிவுப் பயிற்சி புதன் மற்றும் வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவா்களுக்கு அடிப்படை கணின... மேலும் பார்க்க

வெளிநாட்டில் உயிரிழந்தவரின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

வெளிநாட்டில் உயிரிழந்த கூலித் தொழிலாளியின் உடலை, மாவட்ட நிா்வாகம் சாா்பில் மீட்டு அவரது குடும்பத்தினரிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், வடக்கலூா் கிரமத்தைச் சோ... மேலும் பார்க்க

பிரதமா் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு: முன்னாள் ஊராட்சித் தலைவா் உள்பட 5 போ் மீது வழக்கு

பெரம்பலூா் அருகே பிரதமா் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஊராட்சி செயலா், முன்னாள் ஊராட்சித் தலைவா் உள்பட 5 போ் மீது, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

பெரிய வெண்மணி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், பெரிய வெண்மணி ஊராட்சியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை, மின்சாரம் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் வியாழக்கிழமை பாா்வையிட்டு பொத... மேலும் பார்க்க