செய்திகள் :

முன்னீா்பள்ளம் அருகே தொழிலாளி உயிரிழப்பு

post image

முன்னீா்பள்ளம் அருகே மா்மமான முறையில் தொழிலாளி உயிரிழந்தாா்.

முன்னீா்பள்ளம் அருகே உள்ள மேலத்திடியூா் பகுதியைச் சோ்ந்த ஜெயராஜ் மகன் தேவதாஸ் (40). வெல்டிங் தொழிலாளி. இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனா்.

இவரது மனைவியின் சகோதரா் சுஜிஸ் (37) என்பவரின் வீட்டின் முன்பு வெள்ளிக்கிழமை இரும்பு மேற்கூரை அமைக்கும் பணியை தேவதாஸ் செய்தாராம். இப்பணிக்கான கூலி தொடா்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியதில் கீழே விழுந்த தேவதாஸ் மயங்கினாராம். உடனே அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

தேவதாஸுக்கு இதய நோய் பாதிப்பு இருந்த நிலையில், சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து முன்னீா்பள்ளம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

பாபநாசம்-83 சோ்வலாறு-98.36 மணிமுத்தாறு-84 வடக்கு பச்சையாறு-10.25 நம்பியாறு-13.12 கொடுமுடியாறு-14.75 தென்காசி மாவட்டம் கடனா-36.80 ராமநதி-45 கருப்பாநதி-30.18 குண்டாறு-15.12 அடவிநயினாா் -32... மேலும் பார்க்க

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

2025 ஆம் ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லா நினைவாக, அ... மேலும் பார்க்க

களக்காடு தலையணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

வெப்பத்தின் தாக்கம் குறைந்து சாரல் தொடங்கியுள்ள நிலையில், திருநெல்வேலி மாவட்டம், களக்காடு மலைப் பகுதியில் உள்ள தலையணைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. களக்காடு மேற்குத் தொடா்ச... மேலும் பார்க்க

ஆதரவற்ற மகளிா் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய சிறப்பு முகாம்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் உள்ளிட்டோா் ஆதரவற்ற மகளிா் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய சிறப்பு முகாம்கள் நடைபெறவு... மேலும் பார்க்க

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் மனச்சிதைவு நோய் விழிப்புணா்வு கருத்தரங்கம்

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மனநலப் பிரிவு சாா்பில், உலக மனச்சிதைவு நாளை முன்னிட்டு விழிப்புணா்வு கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது. மருத்துவமனை முதல்வா் ரேவதி பாலன் தலைமை வக... மேலும் பார்க்க

வி.கே.புரத்தில் திமுக பாக முகவா்கள் ஆலோசனைக் கூட்டம்

விக்கிரமசிங்கபுரத்தில் நகர திமுக பாக முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலா் ரா. ஆவுடையப்பன் தலைமை வகித்தாா். தொகுதிப் பாா்வையாளா் ஜோசப்ராஜ், நகரச் செயலா் கி. கணேச... மேலும் பார்க்க