லஞ்சம் அளிப்போருக்கு மட்டுமே வீடு! கர்நாடக எம்.எல்.ஏ.வின் தொலைபேசி உரையாடல் கசிவ...
முன்விரோதம்: கத்தியால் குத்தப்பட்டு மாணவா் காயம்
ஆரணியில் முன்விரோதம் காரணமாக உடன் பயிலும் மாணவா் கத்தியால் குத்தியதில், மற்றொரு மாணவா் காயமடைந்தாா்.
ஆரணியில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவா் சதீஷ்குமாா்(14). இவருக்கும் அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மற்றொரு மாணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருமாம்.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை வழக்கம் போல பேருந்தில் பயணம் செய்த இருவரும், பேருந்து நிலையத்தில் இறங்கி நடந்து செல்லும்போது தகராறில் ஈடுபட்டுக்கொண்டே பள்ளி சென்றுள்ளனா்.
இதில் ஆத்திரமடைந்த ஒருவா், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சதீஷ்குமாரை முதுகில் குத்தியதாகத் தெரிகிறது. இதனால், வலியால் துடித்த
சதீஷ்குமாரை, அப்பகுதியில் இருந்த வியாபாரிகள் மீட்டு, சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
தகவல் அறிந்து வந்த ஆரணி நகர போலீஸாா் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.