செய்திகள் :

மும்பையில் தலைமை நீதிபதி கவாயை வரவேற்க வராத உயர் அதிகாரிகள்! காரணம் என்ன?

post image

சமீபத்தில் பதவியேற்ற பின்னர் முதன்முறையாக மும்பைக்கு வந்திருந்தபோது, வரவேற்க மாநிலத்தின் உயரதிகாரிகள் யாரும் வராதது தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் கடும் அதிருப்தி தெரிவித்த நிலையில், ஏன் வரவில்லை? என்ன காரணம்? என்ற சர்ச்சை சமூக ஊடகங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அவமதிக்கப்பட்டாரா, தலைமை நீதிபதி?

மும்பை தாதரில் மகாராஷ்டிரம் மற்றும் கோவா பார் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக, கடந்த ஞாயிறன்று, நாட்டின் 52-வது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றிருக்கும் பி.ஆர். கவாய் தனது சொந்த மாநிலமான மகாராஷ்டிரத்தின் மும்பைக்கு முதன்முதலாக சென்றிருந்தார்.

மரபார்ந்த நடைமுறையின்படி (ப்ரொடோகால்) அப்போது அங்கு அவரை வரவேற்க வந்திருக்க வேண்டிய மகாராஷ்டிர தலைமைச் செயலா், மாநில காவல் துறைத் தலைவர், மும்பை காவல் ஆணையர் உள்பட ஒருவரும் வரவில்லை; இவ்விஷயத்தைப் பின்னர் தாம் பங்கேற்ற நிகழ்ச்சியில் சுட்டிக்காட்டி நீதிபதி பி.ஆா். கவாய் அதிருப்தி தெரிவித்தார்.

அதிருப்தியில்...

இதுதொடர்பாக பாராட்டு விழாவில் உச்ச நீதிமன்றம் மற்றும் பம்பாய் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் நீதிபதி பி.ஆர். கவாய் பேசுகையில், “ஜனநாயகத்தின் தூணான நீதித்துறைக்கு, மற்ற துறைகள் காட்டும் இதுபோன்ற மரியாதை கவலையளிக்கிறது. இங்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான். நீதித்துறை, சட்டப்பேரவை, நிர்வாகம் ஆகிய மூன்றும் ஜனநாயகத்தின் மூன்று தூண்கள். இவை மூன்றும் இணைந்து செயல்பட வேண்டும். ஒவ்வொரு துறையும் மற்றொன்றுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்.

உயரதிகாரிகளுக்கு நெறிமுறைகள் இருக்கும். ஆனால், மாநில காவல் துறை தலைவர், மும்பை காவல் ஆணையர் வர விரும்பவில்லை என்றால் அதுபற்றி அவர்கள் தான் சிந்திக்க வேண்டும்.

நீதிபதிகளாகிய நாங்கள் நாட்டின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்கிறோம். நாங்கள் நாகாலாந்து, மணிப்பூர், அசாம் மற்றும் சமீபத்தில் அமிர்தசரஸுக்குச் சென்றோம். காவல் துறைத் தலைவர், தலைமைச் செயலர், காவல் ஆணையர் ஆகியோர் உடனிருந்தனர்.

நாங்கள் நான்கு வாரங்களுக்கு முன்பு ஜார்க்கண்டில் உள்ள தேவ்கருக்குச் சென்றோம். இது தலைநகர் ராஞ்சியில் இருந்து சுமார் 300 - 400 கி.மீ. தொலைவில் இருக்கிறது. தலைமைச் செயலர் மற்றும் உயரதிகாரிகள் பலரும் அங்குள்ள விமான நிலையத்திற்கு வந்திருந்தனர். ஆனால், இங்கே யாரும் வரவில்லை” எனப் பேசியிருந்தார்.

பின்னர், சில மணி நேரங்களில் தாதரில் உள்ள அம்பேத்கரின் நினைவிடமான சைத்ய பூமிக்கு தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் சென்றபோது, மகாராஷ்டிர மாநிலத் தலைமைச் செயலர் சுஜாதா சௌனிக், காவல் துறை தலைவர் ரஷ்மி சுக்லா, மும்பை காவல் ஆணையர் தேவன் பாரதி ஆகியோர் வந்திருந்தனர்.

தலைமை நீதிபதி வருகையின் மரபார்ந்த நடைமுறை என்ன?

இந்திய தலைமை நீதிபதி வருகையின்போது, ​​மாநில தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை இயக்குநர் ஆகியோர் வரவேற்க வேண்டும் என்பதே மரபார்ந்த நடைமுறை. மேலும், அவர்களுடன் காவல் ஆணையரும் இருப்பார். இது பொதுவான நடைமுறையாக உள்ளது.

தலித் நீதிபதி

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகத் தற்போது பதவியேற்றிருக்கும் நீதிபதி பி.ஆர். கவாய், இந்தப் பொறுப்பேற்கும் 2-வது தலித் என்பதுடன், புத்த மதத்தைச் சேர்ந்த முதல் தலைமை நீதிபதி என்ற பெருமையையும் பெற்றவர்.

தலித் என்பதால்தான் தலைமை நீதிபதியை வரவேற்க வராமல் இவர்கள் புறக்கணித்ததாகக் குறிப்பிட்டும், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை என்னவாக இருக்கும்? என்றும் சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

விஞ்ஞானி ஜெயந்த் நாா்லிகா் மறைவு: குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்

பிரபல வானியற்பியல் விஞ்ஞானி ஜெயந்த் விஷ்ணு நாா்லிக்கா் (86) செவ்வாய்க்கிழமை காலமானாா். அவரது குடும்பத்துக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் மோடி இரங்கல் தெரிவித்தாா். ‘ஹாயில் - நாா்லிகா் பு... மேலும் பார்க்க

ஜொ்மனியின் புதிய பிரதமருடன் பிரதமா் மோடி தொலைபேசியில் பேச்சு

ஜொ்மனியின் பிரதமராக இம்மாத தொடக்கத்தில் புதிதாக பதவியேற்ற ஃப்ரீட்ரிக் மொ்ஸுடன் பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் கலந்துரையாடினாா். ஐரோப்பிய நாடான ஜொ்மனியில் கடந்த பிப்ரவரி மாதம் நட... மேலும் பார்க்க

பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாடு: எம்.பி.க்கள் குழு இன்றுமுதல் வெளிநாடு பயணம்

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை வெளிநாடுகளுக்கு எடுத்துரைக்க மத்திய அரசால் அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஏழு நாடாளுமன்றக் குழுக்கள் புதன்கிழமை (ம... மேலும் பார்க்க

உ.பி.: அடுத்தடுத்து இரு ரயில்களைக் கவிழ்க்க சதி- ஓட்டுநா்களின் முன்னெச்சரிக்கையால் அசம்பாவிதம் தவிா்ப்பு

உத்தர பிரதேச மாநிலம், ஹா்தோய் மாவட்டத்தில் அடுத்தடுத்து இரு பயணிகள் ரயில்களைக் கவிழ்க்க சதிவேலை நடந்துள்ளது. ரயில் ஓட்டுநா்களின் முன்னெச்சரிக்கையால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. இது தொடா்பாக காவல் த... மேலும் பார்க்க

வக்ஃப் சட்டம்: இடைக்கால உத்தரவுக்கான 3 விவகாரங்கள் குறித்து மட்டும் விசாரணை; உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வலியுறுத்தல்

வக்ஃப் திருத்தச் சட்ட விவகாரத்தில் நீதிமன்றம் ஏற்கெனவே சுட்டிக்காட்டிய மூன்று விவகாரங்களில் இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதற்கான விசாரணையை மட்டும் மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு சாா்பில் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

பழங்களை பழுக்க வைக்க சட்டவிரோத ரசாயனங்கள் - மாநில அரசுகள் தடுக்க எஃப்எஸ்எஸ்ஏஐ அறிவுறுத்தல்

சட்டவிரோத ரசாயனங்களின் மூலம் பழங்கள் பழுக்க வைக்கப்படுவதையும், பழங்களின் மேற்பகுதியில் செயற்கை பூச்சுகள் பயன்படுத்தப்படுவதையும் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு, அனைத்து மாநில அரசுகளுக்கும் இந்திய உணவு பா... மேலும் பார்க்க