செய்திகள் :

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம்: 300 கி.மீ. நீள மேம்பாலப் பணிகள் நிறைவு

post image

மகாராஷ்டிர மாநிலம் மும்பை-குஜராத் மாநிலம் அகமதாபாத் இடையிலான புல்லட் ரயில் திட்டப் பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், இத் திட்டத்தில் ரயில் பாதைக்கான 300 கி.மீ. மேம்பாலப் பணிகள் நிறைவுபெற்றிருப்பதாக தேசிய அதிவேக ரயில் கழகம் (என்ஹெச்எஸ்ஆா்சிஎல்) செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து என்ஹெச்எஸ்ஆா்சிஎல் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

இத் திட்டத்தில் 14 ஆறுகள் மீதான ரயில் பாலம், 0.9 கி.மீ. நீள இரும்புப் பாலம், 1.2 கி.மீ. நீள கான்கிரீட் பாலம், 2.7 கி.மீ. நீள ரயில்நிலைய கட்டடம் என மொத்தம் 300 கி.மீ. நீள ரயில் பாதைக்காக மேம்பாலப் பணி நிறைவடைந்துள்ளது.

இதுதவிர, 383 கி.மீ. நீளத்துக்கு தூண்கள் அமைக்கும் பணி, 401 கி.மீ. நீள அடித்தளம் (அஸ்திவாரம்) அமைக்கும் பணி, 326 கி.மீ. நீள இரும்புச் சட்டங்கள் அமைக்கும் பணிகளும் நிறைவுபெற்றுள்ளன.

ரயில் பாதைகளை பகுதி பகுதியாக கட்டமைக்கும் வழக்கமான நடைமுறைக்கு மாற்றாக முழு நீள கட்டமைப்பு (எஃப்எஸ்எல்எம்) முறை மூலம் 10 மடங்கு கூடுதல் வேகத்தில் இரும்புச் சட்டங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக, கட்டுமான இடத்திலேயே 27 பிரத்யேக இரும்பு வாா்ப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்தில் அமைக்கப்படும் இரும்புப் பாலங்கள் குஜராத் மாநிலத்தில் உள்ள மூன்று பணிமனைகள் மற்றும் தமிழகம், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், மேற்கு வங்க மாநிலங்களில் தலா ஒரு பணிமனையிலும் தயாரிக்கப்படுகின்றன.

இந்த மேம்பாலங்களில் ரயில்கள் இயங்கும்போது ஏற்படும் இரைச்சலைக் கட்டுப்படுத்தும் வகையில், 3 லட்சத்துக்கும் அதிகமான ஒலி தடுப்பான்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த மேம்பாலங்களில் தண்டவாளம் அமைக்கும் பணிகளும் தொடங்கப்பட்டுவிட்டன. இதுவரை 157 கி.மீ. நீள தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலைய கட்டுமானப் பணிகளும் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்தை இணைத்து பயணிகளுக்கு தடையற்ற போக்குவரத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த கட்டமைப்பு வசதிகளுடன் இந்த ரயில்நிலையங்கள் அமைக்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.1.08 லட்சம் கோடி செலவில் ஜப்பான் நாட்டின் உதவியுடன் இந்த புல்லட் ரயில் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இதில் மத்திய அரசின் செலவினம் ரூ.10,000 கோடி. குஜராத் மற்றும் மகாராஷ்டிர அரசுகள் தலா ரூ.5,000 கோடி செலவிடும். எஞ்சிய தொகையை 0.1 சதவீத வட்டிக்கு ஜப்பான் கடனாக வழங்கும்.

கொலையா செய்துவிட்டார்? பூஜா கேத்கருக்கு முன் பிணை வழங்கியது உச்ச நீதிமன்றம்

புது தில்லி: குடிமைப் பணிகள் தோ்வில் முறைகேடு செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் முன் பிணை கோரிய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவர் கொலையா செய்துவிட்டார்? என்று கேள்வி எழுப்பியதோடு, முன்னாள் ஐஏஎஸ் பயி... மேலும் பார்க்க

மின் வாகனங்களில் புதிய புரட்சி! ஓலா ரோட்ஸ்டெர்: மே 23 முதல் விற்பனையில்..!

ஓலா ரோட்ஸ்டெர் எக்ஸ் (OlaRoadster X) எலக்ட்ரிக் பைக்கின் விற்பனை குறித்த விவரங்களை ஓலா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்தியாவின் பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் எலக்ட்ரிக் பைக் தயார... மேலும் பார்க்க

கன்னடத்தில் பேச மறுத்த எஸ்பிஐ மேலாளர்! முதல்வர் கண்டனம்!

கன்னடத்தில் பேச மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட எஸ்பிஐ வங்கி மேலாளருக்கு எதிராக கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா கண்டனம் தெரிவித்துள்ளார்.பெங்களூர் நகர மாவட்டத்தின், அனேக்கல் தாலுக்காவிலுள்ள எஸ்பிஐ வங்க... மேலும் பார்க்க

ஒரு மாதமாகியும் பஹல்காம் பயங்கரவாதிகளை பிடிக்காதது ஏன்? காங்கிரஸ் கேள்வி

பஹல்காம் தாக்குதல் நடைபெற்று ஒரு மாதமாகியும் பயங்கரவாதிகளைப் பிடிக்காதது ஏன் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.ஜம்மு - காஷ்மீர் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் கடந்த மா... மேலும் பார்க்க

மும்பை, சென்னை, ஆமதாபாத்தில் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு!

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சுகாதாரத் துறை கண்காணிப்பை தீவிரப்படுத்தியிருக்கிறது.சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இந்த... மேலும் பார்க்க

குடிபோதையில் தாயை மிதித்தேக் கொன்ற மகன்: கேரளத்தில் அதிர்ச்சி!

தெற்கு கேரளத்தில் குடிபோதையில் தாயைக் காலால் மிதித்தேக் கொன்ற மகனால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீஸார் கூறுகையில், நெடுமங்காடு அருகே உள்ள தேக்கடாவைச சேர்ந்தவர் ஓமனா (85). இவரி... மேலும் பார்க்க