செய்திகள் :

மும்பை கனமழை: முடங்கிய புறநகர் ரயில் சேவை; அமிதாப்பச்சன் பங்களாவில் புகுந்த மழை வெள்ளம்

post image

மும்பையில் கடந்த 4 நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக நகரின் மையப் பகுதியில் ஓடும் மித்தி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆற்றங்கரையோரம் ஏராளமான குடிசைகள் இருக்கின்றன. மித்தி ஆற்றில் ஏற்கனவே தண்ணீர் மட்டம் 4 மீட்டர் உயரத்தில் செல்கிறது.

இதையடுத்து பேரிடர் மீட்புப் படையினர் விரைந்து வந்து ஆற்றின் கரையோரம் வசிக்கும் குடிசைவாசிகளைப் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றினர். கிராந்தி நகரில் உள்ள அக்குடிசைவாசிகள் குர்லா மாநகராட்சி பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் பொருட்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் புசன் தெரிவித்தார்.

அமிதாப் இல்லம்
அமிதாப் இல்லம்

கனமழை காரணமாக தாதர் மற்றும் பாந்த்ரா இடையே ரயில் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியது. இதனால் ரயில் மேற்கு ரயில்வேயில் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டது. ஆனால் மத்திய ரயில்வேயில் குர்லாவில் இருந்து சி.எஸ்.டி.எம். வரை ரயில் போக்குவரத்து அடியோடு முடங்கியது. ஹார்பர் லைனிலும் ரயில் சேவை துண்டிக்கப்பட்டது.

இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் ரயில் நிலையங்களில் காத்துக்கிடக்கின்றனர். அவர்களுக்கு தேநீர், பிஸ்கட் மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. இன்று ஒரே நாளில் மும்பையில் 300 மி.மீ., அளவுக்கு மழை பெய்துள்ளது.

அமிதாப்பச்சன் வீட்டிற்குள் மழை வெள்ளம்

மும்பை முழுக்க கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதோடு வாகன போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மும்பையில் அனைத்து அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கவேண்டும் என்று மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

அமிதாப் பச்சன்
அமிதாப் பச்சன்

நடிகர் அமிதாப்பச்சனின் பிரதீக்‌ஷா பங்களாவிற்குள் மழை வெள்ளம் சூழ்ந்தது பங்களாவிற்குள் முட்டு அளவுக்குத் தண்ணீர் நிரம்பிக் காணப்பட்டது. உள்ளே நிறுத்தப்பட்டு இருந்த கார்கள் தண்ணீருக்குள் நின்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவியது.

ஆரம்பக் காலத்தில் அமிதாப்பச்சன் இந்த வீட்டில்தான் வசித்து வந்தார். ஆனால் அந்தப் பங்களாவை தனது மகளுக்கு அமிதாப்பச்சன் தானமாக எழுதிக் கொடுத்துள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

மும்பையை புரட்டிப் போட்ட கனமழை; சாலைகளைச் சூழ்ந்த வெள்ளம்... இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் நேற்றுமுன் தினத்தில் இருந்து தொடர்ந்து விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இக்கனமழை இன்று காலையில் மேலும் தீவிரம் அடைந்தது. இதனால் நகரில் பல சாலைகள் வெள்ளத்தி... மேலும் பார்க்க

Rain Alert: ``சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை" - அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்!

வருகிற 18-ம் தேதி (நாளை) வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, கடந்த சில நாட்களாகவே சென்னை... மேலும் பார்க்க

Mumbai Rain: விமானம், வாகன போக்குவரத்து பாதிப்பு; நிலச்சரிவால் இருவர் பலி; கனமழையிலும் நடந்த உறியடி

மும்பையில் நேற்று தொடங்கிக் கன மழை பெய்து வருகிறது. இம்மழையால் மும்பையின் தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி போக்குவரத்து முடங்கி இருக்கிறது. காந்தி நகர், கிங்சர்க்கிள், சயான், குர்லா, செம்பூர், அந்தேர... மேலும் பார்க்க

Rain Alert: இன்று இந்த 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலார்ட்; 7 மாவட்டங்களில் கனமழை? - வானிலை ரிப்போர்ட்

கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி முதலே தமிழத்தில் பல்வேறு இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை இருக்கும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்க... மேலும் பார்க்க

Nilgiri: ரெட் அலெர்ட்; பள்ளிகளுக்கு விடுமுறை, சுற்றுலாத்தலங்கள் மூடல்; அவசரகால எண்கள் வெளியீடு

நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கடந்த சில நாள்களாக மழை மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. ஊட்டி, குன்னூர், குந்தா, கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் என மாவட்டம் முழுவதும் பரவலாக அவ்வப்போது மழை பெய்து வரு... மேலும் பார்க்க

Rain Alert: இன்று இந்த 8 மாவட்டங்களில் கனமழை; அடுத்த 6 நாள்கள் மழை எப்படி?! - வானிலை ரிப்போர்ட்

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (ஆக.01) கனமழை பெய்ய வாய்ப்புள... மேலும் பார்க்க