செய்திகள் :

மும்பை: குடிபோதையில் கடலுக்கு காரை ஓட்டிய நண்பர்கள்; சுற்றுலா வந்த இடத்தில் சோதனை..

post image

மத்திய பிரதேசத்தை சேர்ந்த பிரிஜேஷ் சோனி (33), ஆந்திராவைச் சேர்ந்த நஜீப் (42) ஆகியோர் மும்பையை சுற்றிப்பார்க்க வந்தனர். அவர்கள் மும்பையில் உள்ள தங்களது நண்பர் யாதவ் என்பவருடன் சேர்ந்து மும்பை முழுக்க காரில் சுற்றிப்பார்த்தனர். மாலை நேரத்தில் அவர்கள் மூன்று பேரும் சேர்ந்து பீர்பாரில் மது அருந்தினர்.

அவர்கள் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு, காரை நேராக ஜுகு கடற்கரைக்கு கொண்டு சென்றனர்.

கார் கடல் அருகில் சென்றபோது அங்கு கிடந்த மணலில் சிக்கிக்கொண்டது. அவர்களால் காரை மேற்கொண்டு நகர்த்த முடியவில்லை. இரவு நேரமாகிவிட்டதால் அவர்களது உதவிக்கு யாரும் வரவில்லை. அந்த வழியாக ரோந்துப்பணிக்கு வந்த போலீஸார் கார் கடல் மணலில் சிக்கி இருப்பதை பார்த்து உடனே அதனை மீட்க உதவி செய்தனர்.

டிராக்டர் ஒன்று வரவழைக்கப்பட்டு கார் மணலில் இருந்து வெளியில் எடுக்கப்பட்டது. அதுவும் இரண்டு மணி நேரம் போராடி கார் வெளியில் கொண்டு வரப்பட்டது.

காருடன் அவர்கள் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு மூன்று பேரும் மது அருந்தி இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து மது அருந்திவிட்டு கார் ஓட்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் மூவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். ஆனால், அவர்களது காரை போலீஸார் விடுவிக்கவில்லை.

குடிபோதையில் அவர்கள் ஓட்டிய கார் மணலில் சிக்காமல் இருந்திருந்தால் கடலுக்குள் சென்று இருக்கும். அதிர்ஷ்டவசமாக மணலில் கார் சிக்கியதால் மூவரும் உயிர் தப்பினர்.

திருவாரூர்: அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு - அதிர்ச்சியில் பெற்றோர்; போலீஸ் விசாரணை!

திருவாரூர் அருகே உள்ள காரியாங்குடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் காரியாங்குடி, நெம்மேலி, இளங்கச்சேரி பகுதிகளை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கின்றன... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: மனைவியின் தங்கை போலீஸில் புகார்; மாமனாரை தெலங்கானாவிற்குக் கடத்திக் கொலைசெய்த மருமகன்!

தஞ்சாவூர் மாவட்டம், சாலியமங்கலம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் சேகர் (65). இவரது மூத்த மகள் ராகினி (35). இவர் தஞ்சையில் உள்ள தனியார் ஹோட்டலில் பணியாற்றினார். அந்த ஹோட்டலில் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த அர... மேலும் பார்க்க

தலைமறைவாக இருந்த பி.ஏ.சி.எல் இயக்குநர் கைது - 5 கோடி மக்களிடம் ரூ.49,000 கோடி மோசடி செய்தது எப்படி?!

இந்தியாவில் அதிக வட்டி தருவதாக கூறி முதலீடுகளை பெற்று மோசடி செய்யும் சம்பவங்கள் எத்தனையோ நடந்துள்ளது. அதில் மிகவும் முக்கியமானது பி.ஏ.சி.எல் அக்ரோ டெக் கார்ப்ரேசன் செய்த மோசடியாகும். இந்தியாவிலேயே மிக... மேலும் பார்க்க

Sneha Debnath: ``ஒரு CCTV கேமரா கூட வேலை செய்யவில்லையா?'' - உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினர் கவலை

6 நாட்களுக்கு முன் காணாமல் போன டெல்லி பல்கலைக்கழக மாணவி சினேகா டெப்நாத் (Sneha Debnath), சடலமாக யமுனை ஆற்றிலிருந்து மீட்கப்பட்டிருக்கிறார். மாணவி சினேகா திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் டெல்லி பல... மேலும் பார்க்க

Sneha Debnath: 6 நாள்களுக்குப் பின் யமுனை ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட மாணவி.. என்ன நடந்தது?

டெல்லியில் உள்ள ஆத்மராம் சனாதன் தர்மா கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வந்த திரிபுராவைச் சேர்ந்த மாணவி ஸ்நேகா தேவ்நாத் (Sneha Debnath) (19) கடந்த ஆறு நாள்களாக காணவில்லை. அவரது குடும்பத்தின... மேலும் பார்க்க

கோவை டாக்டரை டிஜிட்டல் முறையில் கைது செய்து ரூ.2.9 கோடி பறிப்பு; தனியறையில் இருந்தவரை மீட்ட போலீஸார்

நாடு முழுவதும் இணையத்தள குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. நன்றாகப் படித்து உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் கூட சைபர் குற்றவாளிகளின் வலையில் சிக்கி விடுகின்றனர். கோவையைச் சேர்ந்த பிரப... மேலும் பார்க்க