செய்திகள் :

மும்பை: 'தந்தையின் பாதை எனக்கு வேண்டாம்' - தாதா வரதராஜன் மகன் மோகன் மறைவு; தமிழ் அமைப்புகள் இரங்கல்

post image

மும்பையில் வரதராஜன் முதலியார் இறந்த பிறகு அவரது மகன்கள் யாரும் அவரது வழியைப் பின்பற்றாமல் தங்களுக்குத் தனித்தனி வழியை ஏற்படுத்திக்கொண்டனர். அதில் மோகன் மட்டும் தொடர்ந்து மும்பையில் வாழ்ந்து வந்தார்.

மும்பையில் வரதராஜன் நடத்தி வந்த கணபதி விழாவை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வந்தார். மாட்டுங்கா ரயில் நிலையத்திற்கு எதிரில் கணபதி விழா ஒவ்வொரு ஆண்டும் மோகன் தலைமையில் கொண்டாடப்படுவது வழக்கம். தந்தை நடத்தி வந்த கணபதி விழாவை மட்டும் நடத்தி வந்த மோகன் தனது தந்தையின் வழியில் செல்லாமல் தனிப்பாதையில் பயணிக்கத் தொடங்கினார்.

வரதராஜன்
வரதராஜன்

ரியல் எஸ்டேட்டில் கவனம் செலுத்தினார். அவர் மீது குஜராத்தில் கள்ளநோட்டு கடத்தல் வழக்கு மட்டும் பதிவானது. வேறு எந்த வழக்கும் அவர் மீது கிடையாது. சமீப காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த மோகன், விநாயகர் சதுர்த்தியான நேற்று காலமானார். அவருக்கு வயது 72.

அவரது இறுதிச்சடங்கு இன்று மாட்டுங்காவில் நடைபெறுகிறது. மிகவும் மென்மையான குணம் கொண்ட மோகனை அனைவரும் மோகன்பாய் என்று அழைப்பது வழக்கம். வரதராஜன் இறந்த பிறகு மோகனிடம் வரதராஜனின் ஆட்கள் அனைவரும் கூட்டத்தை வழிநடத்தும்படி கேட்டுக்கொண்டனர். ஆனால் அவர்களின் பேச்சைக் கேட்க மறுத்து அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். மோகனின் மறைவுக்கு மும்பையில் உள்ள தமிழ் அமைப்புகள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளன.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

ஆம்பூர் கலவர வழக்கு: `22 பேர் குற்றவாளிகள்’ -முன்னாள் எம்.எல்.ஏ சொத்துகளைப் பறிமுதல் செய்ய உத்தரவு!

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா குச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் 24-ம் தேதி திடீரென மாயமானார். அது குறித்து, பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின் அடிப்படைய... மேலும் பார்க்க

சத்தீஸ்கர் வெள்ளம்: அடித்துச் செல்லப்பட்ட கார் - தமிழகத்தைச் சேர்ந்த ஒரு குடும்பமே பலியான துயரம்!

திருப்பத்தூர் மாவட்டம், பாரண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 43). இவரின் மனைவி பவித்ரா (40), மகள்கள் சௌஜைன்யா (8), சௌமையா (6). சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் கடந்த 15 ஆண்டுகளாக கட... மேலும் பார்க்க

கூடலூர்: போக்கு காட்டும் புலி, கேரளாவிலிருந்து பிரத்யேக கூண்டை வரவழைத்த வனத்துறை - என்ன நடக்கிறது?

நீலகிரி மாவட்டத்தில் மனித - வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக கூடலூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் எதிர்கொள்ளல்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த... மேலும் பார்க்க

விருதுநகர்: ஏலக்காய் தோட்டத்தில் கள்ளச்சாராயம், வனவிலங்கு வேட்டை; 6 பேர் கைதின் பின்னணி என்ன?

விருதுநகர் மாவட்டம் சேத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலையில் சூரியன்கல் எஸ்டேட் அமைந்துள்ளது. இந்த எஸ்டேட்டில் ஏலக்காய், கிராம்பு உட்பட நறுமணப் பொருட்கள் விளைவிக்கப்படுகின்றன.இந்த எஸ்டேட்டை தேவதானத்தைச் சே... மேலும் பார்க்க

விஷப்பூச்சி கடித்து மாற்றுத்திறனாளி சிறுவன் உயிரிழப்பு - வேலூரில் அதிர்ச்சி!

வேலூர், விருப்பாட்சிபுரம் காந்தி நகரைச் சேர்ந்த முடிதிருத்தும் சலூன் தொழிலாளி ரமேஷ். இவரின் 13 வயது மகன் சஞ்சய், வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளி ஆவார். விநாயகர் சதுர்த்தியையொட்டி, நேற்று இரவு 8 மணியள... மேலும் பார்க்க

சரிவு பகுதியில் அத்துமீறி வுட் ஹவுஸ் கட்டிய ஆந்திரா க்ரூப்; அதிரடி காட்டிய அதிகாரிகள்- பின்னணி என்ன?

இந்தியாவின் முதல் பல்லுயிர் பெருக்க வள மண்டலமாக அறிவிக்கப்பட்டிருக்கும் நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றுலாவின் பெயரால் பல்வேறு விதிமீறல்களை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்ப... மேலும் பார்க்க