செய்திகள் :

மும்பை: திருமண ஆசையில் ரூ.57 லட்சத்தை இழந்த 73 வயது மூதாட்டி; 62 வயது முதியவருக்கு வலைவீச்சு

post image

மும்பையையொட்டி இருக்கும் தானே டோம்பிவலியில் வசிக்கும் 73 வயது மூதாட்டி திருமண வரன் தொடர்பாக ஒரு விளம்பரத்தை பேப்பரில் பார்த்தார்.

அதில் 62 வயது நபர் தன்னைத் திருமணம் செய்து கொள்ளப் பெண் தேவை என்று குறிப்பிட்டு இருந்தார்.

உடனே அந்த விளம்பரத்திலிருந்த தொலைப்பேசி நம்பரை எடுத்து மூதாட்டி பேசினார். மூதாட்டியிடம் 62 வயது முதியவர் மிகவும் கனிவாகப் பேசினார்.

அதோடு இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஆசை வார்த்தை கூறினார். திருமணத்திற்குப் பிறகு புனேயில் அமைதியாக வாழ்க்கை வாழலாம் என்று சொன்னதை மூதாட்டியும் நம்பினார்.

பண மோசடி
பண மோசடி

புனேயில் இருவரும் சேர்ந்து வாழ வீடு ஒன்று வாங்கப் போகிறேன் என்றும், அதற்கு ரூ. 35 லட்சம் கொடுத்து உதவும்படியும் அந்த 62 வயது நபர் கேட்டுக்கொண்டார்.

மூதாட்டியும் அவரை நம்பி 35 லட்சத்தைக் கொடுத்தார். அதற்குப் போலி பில் மற்றும் போலி வீடு வாங்கிய ஆவணங்களை மூதாட்டியிடம் கொடுத்து நம்ப வைத்தார்.

மேலும் தற்காலிகமாக 62 வயது நபர் மூதாட்டியின் வீட்டில் தங்கினார். அப்படித் தங்கும்போது மூதாட்டியிடம் இருந்த ரூ.20 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளையும் திருடிக்கொண்டார்.

அதோடு மூதாட்டியின் டெபிட் கார்டை திருடி அதிலிருந்து ரூ.2.2 லட்சத்தை எடுத்துக்கொண்டார்.

பின்னர் முதியவர் திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி இது குறித்து போலீஸில் புகார் செய்துள்ளார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன முதியவரைத் தேடி வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

20 ஆண்டுகளில் பாலியல் கொடுமைக்கு இரையான 299 பேர்... பிரான்ஸை அதிரவைத்த ஓய்வுபெற்ற மருத்துவர்!

கடந்த 20 வருடங்களில் சிறுமிகள், பெண்கள் என 299 பேரை பாலியல் வன்கொடுமை, பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில் ஓய்வுபெற்ற மருத்துவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக ராய... மேலும் பார்க்க

மண்ணில் புதைக்கப்பட்ட ஏலக்காய் மூடைகள்; இலங்கைக்கு கடத்த முயன்ற தந்தை - மகனுக்கு போலீஸ் வலை!

கடந்த சில ஆண்டுகளாக தமிழக கடலோர பகுதிகளில் இருந்து போதைப்பொருள்கள், கஞ்சா, கடல் அட்டை போன்றவை இலங்கைக்கு கள்ளத்தனமாக கடத்தப்பட்டு வருகின்றன. இவற்றுடன் தற்போது சமையலுக்குப் பயன்படுத்தும் விராலி மஞ்சள்,... மேலும் பார்க்க

தூத்துக்குடி: நிலத்தைக் கேட்டு பெண்ணிற்குக் கொலை மிரட்டல்; திமுக எம்எல்ஏ-வின் சகோதரர் கைது

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ., சண்முகையா. இவரது உடன்பிறந்த சகோதரர் அயிரவன்பட்டி முருகேசன்.தொழிலதிபரான இவர் முன்னாள் அ.தி.மு.க பிரமுகர். முருகேசன் ஓட்டப்... மேலும் பார்க்க

`தொழிலதிபரிடம் லஞ்சம்' - அமலாக்கத்துறை அதிகாரியை கைது செய்த சிபிஐ; சிக்கியது எப்படி?

ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வர் அமலாக்கத் துறையின் இணை இயக்குநர் சிந்தன் ரகுவம்சி. இவர் தொழிலதிபர் ஒருவரிடம் லஞ்சம் வாங்க முயன்றபோது சிபிஐ-யால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக வெளியான செய்தியில், சுரங்... மேலும் பார்க்க

புதுச்சேரி: பெண்ணை நிர்வாணமாக்கி தாக்கிய போலீஸ் - தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு பறந்த புகார்

புதுச்சேரி புதுக்குப்பம் மீனவ கிராமத்தில் அமைந்திருக்கிறது `லே பாண்டி’ (Le Pondy) நட்சத்திர விடுதி. சில தினங்களுக்கு முன்பு இங்கு தங்கிச் சென்ற கேரளாவைச் சேர்ந்த ஒரு தம்பதி, தங்களுடைய அறையில் வைத்திரு... மேலும் பார்க்க

Kerala: பழங்குடி இளைஞரின் ஆடைகளை கழற்றி கட்டிவைத்து தாக்கிய கொடூர சம்பவம்.. நடந்தது என்ன?

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடியில் பழங்குடியின இளைஞர் சிஜூ (20) என்பவரின் ஆடைகளை கழற்றி மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்கியதாக புகார் எழுந்தது. கடந்த 24-ம் தேதி நடந்த இந்த சம்பவத்தின் வீடிய... மேலும் பார்க்க