செய்திகள் :

மும்பை: வாட்ஸ்அப் மிரட்டல்; கணபதி விழாவை சீர்குலைக்க தீவிரவாதிகள் திட்டம்? - உஷார் நிலையில் போலீஸ்!

post image

மும்பையில் நாளை விநாயகர் சதுர்த்தியின் இறுதிநாளாகும். ஆனந்த சதுர்த்தியான நாளை ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட இருக்கிறது. ஏற்கனவே 7வது நாளில் ஆயிரக்கணக்கான கணபதி சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டுவிட்ட நிலையில் எஞ்சிய சிலைகள் நாளை கரைக்கப்படும். இதில் எந்த வித அசம்பாவித சம்பவமும் நடக்காமல் இருக்க 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தாதர், கிர்காவ், ஜுகு போன்ற கடற்கரைகளில் சிலைகளை கரைக்க மாநகராட்சி நிர்வாகம் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த விநாயகர் சிலை கரைப்பை சீர்குலைக்கப்போவதாகவும், வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்போவதாகவும் மிரட்டல் வந்துள்ளது.

400 வெடி மருந்துகளுடன் 14 தீவிரவாதிகள்

மும்பை போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு அறையின் ஹெல்ப்லைன் வாட்ஸ்அப் நம்பருக்கு இந்த மிரட்டல் வந்துள்ளது. அதில் 400 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துகளுடன் 14 தீவிரவாதிகள் மும்பைக்குள் நுழைந்திருப்பதாகவும், அவர்கள் 34 வாகனங்களில் வெடிகுண்டுகளை வைப்பார்கள் என்றும், இதன் மூலம் ஒரு கோடி மக்களை கொலை செய்ய முடியும் என்றும், இத்தாக்குதல் மூலம் ஒட்டுமொத்த நகரமே அதிரும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனை லஷ்கர்-இ-ஜிஹாதி என்ற அமைப்பு அனுப்பி இருந்தது. இது குறித்து குற்றப்பிரிவு போலீஸார், தீவிரவாத தடுப்பு படைக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர். அவர்கள் இது குறித்து விசாரித்து வருகின்றனர். இம்மிரட்டலை தொடர்ந்து முக்கியமான கணபதி மண்டல்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையில்லாத வதந்திகளை நம்பவேண்டாம் என்று போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். இது தொடர்பாக போலீஸார் விடுத்துள்ள செய்தியில், ''எந்த வித மிரட்டலையும் போலீஸார் எதிர்கொள்வார்கள். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் சோதனை செய்யப்பட்டு வருகிறது'' என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1,100 கோடி ரூபாய்க்கு விற்பனைக்கு வருகிறது நேருவின் பங்களா - பின்னணி என்ன?

டெல்லியில் இருக்கும் நேருவின் லுட்யன்ஸ் பங்களா 1,100 கோடி ரூபாய்க்கு விற்பனையாக உள்ளது. 3.7 ஏக்கர் பரப்பளவில், 24,000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள இந்த பங்களா, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ... மேலும் பார்க்க

'Ghosting, Pookie, Salty, Finsta' - தினுசான GenZ Words; ஜெர்க்காகும் 90ஸ் கிட்ஸ்!

ஆக்ஸ்போர்டு டிக்ஷனரில கூட வருஷத்துக்கு நாலு முறை தான் வேர்ட்ஸ் சேக்குறாங்க... ஆனா நம்ம ஜென்சி கிட்ஸ் ஒவ்வொரு நாளும் தினுசு தினுசா வார்த்தைகளைக் கண்டுபிடிக்கிறாங்க.. இன்ஸ்டா, ஃபேஸ்புக், செலிபிரிட்டி இன... மேலும் பார்க்க

17 ஆண்டுகளுக்குப் பிறகு ஜாமீனில் விடுதலையான மும்பை தாதா அருண்காவ்லி.

மும்பையில் கொலை, மிரட்டி பணம் பறித்தல், ஆள் கடத்தல் போன்ற காரியங்களில் ஈடுபட்டு வந்தவர் அருண் காவ்லி. மும்பையில் தற்போது மாபியா கும்பல்கள் ஒழிக்கப்பட்டுவிட்ட நிலையில் அருண் காவ்லி உட்பட ஒரு சில கிரிமி... மேலும் பார்க்க

சாக்லேட்டில் வடிவமைக்கப்பட்ட பிரதமர் மோடியின் சிற்பம்; 7 நாள்கள் உழைத்து தயாரித்த மாணவர்கள் குழு!

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை ( செப்டம்பர் 17) முன்னிட்டு ஒடிசாவை சேர்ந்த மாணவர்கள் அவரது உருவத்தை சாக்லேட்டில் வடிவமைத்து அசத்தியுள்ளனர். இதற்காக இவர்கள் 55 கிலோ டார்க் சாக்லேட் மற்றும் 15 கி... மேலும் பார்க்க

`வேலை, திருமண வாழ்வு வேண்டாம்..!' - கப்பலில் வாழ்ந்து வரும் பெண்; வருமானம் எப்படி வருகிறது தெரியுமா?

அமெரிக்காவை சேர்ந்த லின்னெல் என்பவர் Poverty to Paradise என்ற யூடியூப் சேனலை உருவாக்கி, தான் வாழும் கப்பல் அனுபவங்கள் குறித்து அதில் பதிவிட்டு வருகிறார். 2024 ஆம் ஆண்டில் அவர் பலவிதமான நெருக்கடிகளை சந... மேலும் பார்க்க