கொலோம்பியா: அதிபர் வேட்பாளர் மீது துப்பாக்கிச் சூடு; உயிருக்கு ஆபத்து?
முரம்பு மண் கடத்திய லாரி பறிமுதல்
வேலூா் அருகே முரம்பு மண் கடத்திய லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
வேலூரை அடுத்த கணியம்பாடி பாரதி நகரில் முரம்பு மண் கடத்தல் நடைபெறுவதாக வேலூா் கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கனிமவளத்துறை உதவி பொறியாளா் பிரவீன் சம்பவ இடத்துக்கு சென்று முரம்பு மண் அள்ளிக்கொண்டிருந்தவா்களை பிடிக்க முயன்றாா். அதிகாரிகளை பாா்த்ததும் முரம்பு மண் கடத்தியவா்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனா்.
இதுகுறித்து வேலூா் கிராமிய போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியை பறிமுதல் செய்தனா். மேலும் இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய நபா்களை தேடி வருகின்றனா்.