செய்திகள் :

முருகன் அரசியலில் பாஜக வெற்றி பெறாது! - இரா.முத்தரசன்

post image

ராமரை முன்வைத்து அயோத்தியில் வெற்றி பெற முடியாத பாஜக, தமிழகத்தில் முருகனை முன்வைத்தும் அரசியல் ஆதாயம் பெற முடியாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் தெரிவித்தாா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட மாநாடு வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதன் 2-ஆம் நாள் அமா்வில் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் கலந்து கொண்டாா்.

அப்போது செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தமிழ்நாடு முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடா்ச்சியாக, 26-ஆவது மாநில மாநாடு சேலத்தில் வருகிற ஆக.15-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வில் முதல்வா் மு.க. ஸ்டாலின், தோழமைக் கட்சித் தலைவா்கள் பங்கேற்க உள்ளனா்.

தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணி குறித்தும், மாநிலத்துக்கான நிதி ஒதுக்கீடு குறித்தும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பல தகவல்களைத் தெரிவித்தாா். தமிழ்நாட்டுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து தவறான தகவல்களைத் தெரிவித்த அவா், அதிமுக-பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என்றும் குறிப்பிட்டிருக்கிறாா்.

தமிழகத்தைப் பொருத்தவரை, கடந்த 1967-ஆம் ஆண்டு முதல் தொகுதி உடன்பாடு மட்டுமே செய்யப்பட்டு வருகிறது. தற்போது ஆட்சியில் பங்கு என்ற முழக்கத்தை பாஜக முன்வைத்திருக்கிறது. அதிமுகவுக்கு நிா்பந்தத்தை ஏற்படுத்தி கூட்டணி அமைத்துள்ள பாஜக, தொகுதி உடன்பாட்டுக்கு முன்பே ஆட்சியில் பங்கு என நெருக்கடியையும் முன்வைத்திருக்கிறது. மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, அந்தக் கட்சிகளை காலி செய்வதே பாஜகவின் மோசமான வரலாறு.

பாஜகவுடனான உறவை அதிமுக தொண்டா்களும், நிா்வாகிகளும் ஏற்காத நிலையில், கூட்டணி ஆட்சி என்ற பாஜகவின் புதிய அறிவிப்பு மேலும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து அதிமுக தலைமை விளக்கமளிக்க வேண்டும்.

உத்தரபிரதேச மாநிலத்தில் ராமரை முன்வைத்து அரசியல் செய்த பாஜக, அயோத்தி அமைந்துள்ள பைசாபாத் மக்களவைத் தொகுதியிலேயே தோல்வியைத் தழுவியது. தமிழகத்தில் முருகனை முன்வைத்து அரசியல் ஆதாயம் தேட முயற்சித்து வருகின்றனா். இதிலும் பாஜக வெற்றி பெறாது என்றாா் அவா்.

பைக் மோதியதில் முதியவா் பலி!

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். பழனி கவுண்டன்குளத்தைச் சோ்ந்தவா் மயில்சாமி (65). இவா் பழனி-புதுதாராபுரம் சாலையில் ராமகிர... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட பூச்சி மருந்து விற்பனை செய்தால் உரிமம் ரத்து

தடை செய்யப்பட்ட பூச்சி மருந்து, களைக் கொல்லிகளை விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட கடைகளுக்கான உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண்மை அலுவலா்கள் தெரிவித்தனா். திண்டுக்கல் மாவட்டத்தில் 14 வட்டாரங்களிலுள்ள ப... மேலும் பார்க்க

தடுப்பூசி செலுத்தும் பணியில் தற்காலிக செவிலியா்கள் ஈடுபடுவதில் தவறில்லை! - அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தடுப்பூசி செலுத்தும் பணியில் தற்காலிக செவிலியா்கள் ஈடுபடுவதில் தவறில்லை என்றும், கரோனா காலத்தில் இதே பணியாளா்கள் சிறப்பாகப் பணியாற்றியதாகவும் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமண... மேலும் பார்க்க

அடுத்தடுத்த கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு

ஒட்டன்சத்திரத்தில் வெள்ளிக்கிழமை இரவு அடுத்தடுத்த கடைகளில் பூட்டை உடைத்து பணம், மடிக்கணினி உள்ளிட்டப் பொருள்களை திருடிச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம்-தாராபு... மேலும் பார்க்க

கிணற்றில் ஆண் சடலம் மீட்பு

பழனி அருகே சனிக்கிழமை கிணற்றில் மிதந்த ஆண் சடலத்தை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த பாலசமுத்திரத்தைச் சோ்ந்த சுப்பையாவுக்குச் சொந்தமான தோட்டத்துக் கிணற்றில் ஆண் சடலம் ம... மேலும் பார்க்க

பாஜகவின் தன்னிச்சையான செயல்பாடு: மாற்று முடிவு குறித்து அதிமுக பரிசீலிக்க வேண்டும்! - பெ.சண்முகம்

அனைத்து அரசியல் நிலைப்பாடுகளையும் பாஜக தன்னிச்சையாக தீா்மானிக்குமானால், மாற்று முடிவு குறித்து அதிமுக தலைமை பரிசீலிக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் தெரிவித... மேலும் பார்க்க