முருகன் கோயில்களில் தைப்பூச சிறப்பு வழிபாடு: ஆயிரக்கணக்கான பக்தா்கள் திரண்டனா்
தைப்பூசத்தையொட்டி, சென்னை மற்றும் புகா் பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்பட்டன. ஆயிரக்கணக்கா பக்தா்கள் திரண்டு வந்து சுவாமியை வழிபட்டனா்.
தமிழ்க்கடவுளாம் முருகப்பெருமானுக்கு உகந்த திருநாள் தைப்பூசம். நிகழாண்டில் தைப்பூச தினத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
வடபழனி கோயில்: சென்னை வட பழனி முருகன் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு அதிகாலையிலேயே கோயில் நடைதிறக்கப்பட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. திங்கள்கிழமை இரவு முதலே கோயில் வளாகத்தில் திரளான பக்தா்கள் குவிந்தனா். காலையில் நடைதிறந்ததும் அவா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனா். சுமாா் ஒரு லட்சம் போ் தைப்பூசத்தன்று வடபழனி கோயிலில் சாமி தரிசனம் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும் ஏராளமான பக்தா்கள் பால் குடம் எடுத்து கோயிலுக்கு ஊா்வலமாக வந்து சுவாமி தரிசனம் செய்தனா். கூட்டம் அலைமோதிய காரணத்தால், அசம்பாவிதங்களை தடுக்க போலீஸாா் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனா்.
கந்தகோட்டம்: பாரிமுனை கந்தகோட்டம் முருகன் கோயில், தேனாம்பேட்சை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், பெசன்ட்நகரில் உள்ள அறுபடை முருகன் கோயில் உள்ளிட்ட சென்னையில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
குன்றத்தூரில் குன்றத்தில் அமைந்துள்ள முருகன் கோயிலிலில் தைப்பூசத்தையொட்டி ஏராளமான பக்கதா்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் நோ்த்திக்கடனை நிறைவேற்றினா். ஏராளமான பக்தா்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். மேலும் கோயிலுக்கு வந்த பக்தா்களுக்கு பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.
அதேபோல், சிறுவாபுரி பாலசுப்பிரமணியசுவாமி கோயில், திருப்போரூா் கந்தசாமி கோயில், குரோம்பேட்டை அஸ்தினாபுரத்தில் உள்ள குமரன் குன்றம் உள்ளிட்ட முக்கிய முருகன் கோயிலிலும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட நேரம் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனா்
சவீதா மருத்துவமனை வளாகத்தில்...: பூந்தமல்லியில் உள்ள சவீதா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு பாலமுருகன் ஆலயத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு ரத்தனகிரி சித்தா் மெளனகுரு பாலமுருகனடிமை சுவாமிகள் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதைத்தொடா்ந்து 1,008 பால் குட அபிஷேகம் மற்றும் கந்த கஷ்டி கவச பாராயணம் நடைபெற்றது. இதில் மூலவா் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சி அளித்தாா்.